districts

img

பேருந்து வசதியில்லாமல் அவதிப்படும் மாணவர்கள்

ஈரோடு, டிச.12- பேருந்து வசதியில்லாததால் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நுழைவாயில் முன்பு மாணவர்கள் அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்கும் அவலம் நாள் தோறும் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை சாலை யில் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே அரசு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இதில்,  ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று  வருகின்றனர். மாவட்டத்தின் பிற பகுதிகளிலி ருந்து வரும் மாணவர்கள் பேருந்து நிலையம்  வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் மூலம்  சென்று வருகின்றனர். மாணவர்கள் காலை  8.30 மணிக்கு ஐடிஐ நிறுத்தத்தைக் கடக் கும் பேருந்தில் இடம் பிடிக்க முயல்கின்ற னர். அடுத்த பேருந்து 9.00 மணிக்குத் தான்  வருகிறது. முதல் பேருந்தினைப் பிடிக்க  முடியாதவர்கள், அதில் இடம் கிடைக்காதவர் கள் அடுத்த பேருந்தில் தான் வர முடிகிறது.  இவ்வாறு வரும் மாணவர்கள் உள்ளே செல்ல  அனுமதிக்கப்படாமல் வெளியில் நிறுத்தப் படுகின்றனர். இவர்கள் கடுமையாக எச் சரிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த மூன்று  மாதங்களில் பல மாணவர்கள் இடைநிற் றல் ஏற்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தி லிருந்து வெறியேறி (Dropout) வருகிறார் கள். இந்த அவலத்தை போக்க நிர்வாகமும், போக்குவரத்து துறையும் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாண விகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.