districts

img

கதவுகள் இல்லாத கழிவறையால் மாணவர்கள் அவதி

உடுமலை, டிச. 25- உடுமலை தாலுகா மனுப்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளியில் மாண வர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் கதவுகள் இல்லாத அவல நிலை உள்ளது.  உடுமலை தாலூக்கா மனுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்று முதல் எட்டு வரை வகுப்புகள் நடை பெற்று வருகிறது. இந்த பள்ளியில் 130க்கும் மேற்பட்ட மாணவ மாண வியர்கள் படித்து வருகிறார்கள். இந்த  பள்ளியில் உள்ள கழிவறையில் கதவு கள் இல்லாமல் திறந்த வெளியில்  இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.  இதுகுறித்து மாணவர்கள் மற்றும்  சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகை யில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் எவற்றிலும் கதவுகளே இல்லை. திறந்த வெளியில் உள்ளதை சரி  செய்ய வேண் டும் என்று கடந்த ஒருவருடமாக சொல்லி வருகி றோம். அனைத்து அதிகாரிகளுக் கும் மனு கொடுத் துவிட்டோம். ஆனாலும் தற்போதுவரை கழி வறைக்கு கதவு பொருத்தப்பட வில்லை. கடந்த வருடம் நவம்பர்  மாதம் 11 ஆம் தேதி மனுப்பட்டி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் நிறை வேற்றபட்ட தீர்மானத்தில் பள்ளி வளா கத்தில் இருக்கும் குடிநீர் தொட்டி  மற்றும் வகுப்பறைகளை முறையாக  பராமரிக்க வேண்டும்.பள்ளி மாண வர்கள் பயன்படுத்த முடியாத நிலை யில்  இருக்கும் கழிவறைகளை சரி  செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது. 2022 ஆம் ஆண்டு  அக்டோபர் 2 ஆம் தேதி நடை பெற்ற கிராம சபை கூட்டத்திலும் மனுவாக தெரிவித்தோம். ஆனால்,  எவ்வித நடவடிக்கையும் இல்லை. திறந்தவெளியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பக்கம்  பக்கமாய் விளம்பரம் செய்யப்படு கிறது. ஆனால், எங்கள் பள்ளியில் உள்ள கழிவறையே திறந்த வெளி யில் மலம் கழிக்கும் சூழலைப்போன் றுதான் உள்ளது என ஆதங்கப்பட்ட னர்.