அவிநாசி, ஜூலை 5- அவிநாசி அரசு துவக்கப் பள்ளி யில் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி செவ்வாய்க்கிழமை மாணவர்கள் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாவட்டம் அவினாசி பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மூன்று நிரந் தர ஆசிரியர்கள் மட்டுமே பணிபு ரிந்து வரக்கூடிய சூழ்நிலையில், போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பெற் றோர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சி யர், பள்ளி கல்வித்துறை, வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோருக் குப் பலமுறை மனு அளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், கோரிக்கை நிறை வேறாத காரணமாக, நிரந்தரமாக 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க கோரி செவ்வாயன்று பள்ளி தொடங்கியது முதல் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி வாயி லின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவினாசி காவல் அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கூடுதலாக இரண்டு ஆசிரி யர்கள் நியமனம் செய்வதாக உறுதி யளித்த பின்பு போராட்டத்தைக் கைவிட்டு மாணவர்கள் பெற்றோர் கள் கலைந்து சென்றனர்.