சேலம், ஆக.20- கொல்கத்தாவில் பாலியல் வன் கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம், கொல் கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய் யப்பட்டார். இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பெண்கள், குழந்தை களை பாலியல் ரீதியாக துன்புறுத்து பவர்களுக்கு உடனடியாக கடும் தண் டனை வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாது காக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் டார்வின் தலைமை வகித்தார். இதில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, மாவட்டப் பொருளாளர் பெருமா, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் பெரிய சாமி, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.பவித்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ. பவித்ரன், மாவட்டத் தலைவர் எம். ஸ்நேகா, மாவட்டக்குழு உறுப்பினர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.