திருப்பூர், பிப்.20- போதுமான பேருந்து வசதி இல்லாத இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் சென்று வர முடியாமல் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்ற னர். சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கி கல்வி கற்க ஏது வாக காலேஜ் சாலை ஹொசிங் போர்ட் பகுதியில் பி.சி தங்கும் விடுதி செயல் பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கு தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்கள் தங்க ஊத்துக்குளி அருகே மாற்று ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு போது மான போக்குவரத்து வசதி இல்லை, கழிப்பிடம், தங்கும் அறை போதுமான தாக இல்லை என்று மாணவர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறு கையில், நாங்கள் வெளி மாவட்டங் கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து திருப்பூருக்கு வந்து கல்லூரியில் படித்து வருகின்றோம். வெளியில் அறை எடுத்து தங்க வசதி இல்லாத தால், அரசு தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றோம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு தங்கும் விடுதியில் பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப் போவதாக தெரிவித்தனர். மேலும், ஊத்துக்குளி, குலத்துப்பாளை யம் செக்போஸ்ட் அருகே மாற்று ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரி வித்தனர். இதையடுத்து, நாங்கள் புதி தாக ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் விடு திக்கு மாற்றப்பட்டோம். இந்நிலையில், அங்கிருந்து கல்லூரிக்கு தினசரி வந்து செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. 100க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளோம். ஒரு அறையில் 25 பேர் வரி தங்கி இருக்கின்றோம். 6 கழிப்பிடங் கள் மட்டுமே உள்ளது. இதனால் தின மும் காலையில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம். 3 வேலை உணவு கிடைத்தாலும் தரமானதாக இல்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காலையில் பேருந்து நிறுத் ததில் வந்து நின்றால் பேருந்துகள் நிற்ப தில்லை. இதனால் குறித்த நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை கருத் தில் கொண்டு பேருந்து வசதி, தங்கும் இடம் வசதி, தரமான உணவு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தெரிவித்தனர்.