districts

img

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாணவர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, அக்.20- அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என, இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. இந்திய மாணவர் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பாலக் கோடு ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம், பாலக்காடு சத்யா  மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலை வர் எம்.சினேகா தலைமை வகித்தார். ரோஷினி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பவித்திரன், வட்டச் செய லாளர் ஸ்டாலின், வாலிபர் சங்க தலைவர் கார்ல் மார்க்ஸ், நிர்வாகிகள் அருண், பாண்டியம்மாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், குலக்கல்வி முறையை ஊக்கு விக்கும் தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். பாலக்கோடு ஒன்றியம், ஜட்டான்டஹள்ளி, குழிக்காடு கிரா மத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் பாலக்கோடு ஒன்றியத் தலைவராக ஜனா, செய லாளராக தொல்காப்பியன், துணைத்தலைவராக கோவிந்த சாமி,  இணைச்செயலாளராக உதய தமிழ்ச்செல்வன் மற்றும் 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.