districts

img

விவசாயிகளை ஈர்த்த மாணவர்களின் புதுமைக் கண்டுபிடிப்பு!

கோவை, ஜன.5- சூலூர் அருகே நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் மாண வர்களின் புதுமைக் கண்டுபிடிப் பான ‘ரோபோட்டிக் மழைக்குழாய் உருளை’ விவசாயிகளின் கவ னத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம், சூலூர்  அருகே எல்அன்ட்டி புறவழிச்சா லையில் உள்ள தனியார் பொறியி யல் கல்லூரியில் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் வேளாண் கண் காட்சி நடைபெற்றது. இதில், விவ சாயத்துறையில் புரட்சியை ஏற்ப டுத்தும் வகையில் ஒரு புதுமை யான கண்டுபிடிப்பை கல்லூரி மாணவர்கள் அறிமுகம் செய்தனர்.  மழைக்காலங்களில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய் யும் பணியை எளிமைப்படுத்தும் வகையில், முற்றிலும் ரோபோட் டிக் முறையில் இயங்கும் மழைக் குழாய் உருளையை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த மழைக் குழாய் உருளை, பேட்டரிகளால் இயங்குகிறது. இதில் பொருத் தப்பட்டுள்ள சிப் பயன்பாடுகள் மூலம், மின்சாரம் தடைப்பட்டா லும் கூட இதை எளிதாக இயக்க முடியும். இதன் மூலம், விவசாயி கள் மழைக்காலங்களில் மின்சாரம் தடைபடுவதால் ஏற்படும் இடை யூறுகளை தவிர்க்கலாம். இந்த சாத னத்தில் கொடுக்கப்பட்ட சுவிட்சு களைப் பயன்படுத்தி, நீர் பாய்ச்சும் வேகத்தை எளிதாகக் கட்டுப் படுத்தலாம். மேலும், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதால், தேவை யான அளவு நீரை மட்டுமே பாய்ச் சும் வகையில் இதை இயக்க முடி யும். இந்த ரோபோட்டிக் மழைக் குழாய் உருளை, உயர் வோல்டேஜ் பேட்டரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இத னால், மழையில் நனைந்தாலும் கூட சேதமாகாது. மேலும், செல் போன்களுடன் இணைத்து இதை இயக்கலாம் என்பது இதன் சிறப் பம்சமாகும். இந்த புதுமையான கண்டு பிடிப்பு, விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலவாகும். இதன் மூலம் விவசாயிகள் குறைந்த செல வில் அதிக பலனைப் பெற முடி யும். இந்த ரோபோட்டிக் மழைக் குழாய் உருளை, விவசாயத் துறை யில் புதிய தொழில்நுட்ப புரட் சியை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது விவசாயி களின் உழைப்பை குறைத்து, உற் பத்தியை அதிகரிக்க உதவும். மேலும், இதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகள், நம் நாட்டின் விவசாயத்தை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும். இந்த புது மையான கண்டுபிடிப்பை உருவாக் கிய மாணவர்களை பல்வேறு தரப் பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த கண்டுபிடிப்பு கண்காட்சிக்கு வந்த விவசாயிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத் தக்கது.