districts

img

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் நீதி கேட்டு போராடிய மாணவர் சங்க தலைவர் அடாவடி கைது

நாமக்கல், மே 2- ராசிபுரம் கலைக் கல்லூரியில் நியாயம் கேட்டுப் போராடிய மாணவர் சங்கத் தலைவரை குண்டு கட்டாக தூக்கி, அடாவடி யாக கைது செய்த போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தை அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி  செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இந்நிலையில், கல்லூரி இயற்பியல் பேராசிரியரான சுந்தர மூர்த்தி என்பவர், கடந்த சில  தினங் களுக்கு முன்பு கல்லூரியில் பயி லும் முதலாம் ஆண்டு மாணவியி டம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப் பட்ட மாணவி ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையி னர் சுந்தரமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய் துள்ளனர். ஆனால், இதுவரையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. போலீசாரின் இந்த அலட்சிய நடவடிக்கையை கண்டித் தும், பேராசிரியர் சுந்தரமூர்த்தியை கைது செய்யக்கோரியும், கல்லூரி யில் பயிலும் மாணவர்கள், இந்திய  மாணவர் சங்கத்தின் தலைமையில் தேர்வை புறக்கணித்து உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால், ஆத்திரமடைந்த போலீசார், இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் தங்கராஜை  தர தரவென இழுத்து, குண்டு கட் டாக தூக்கி சென்று கைது செய்து  பள்ளி வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற னர். போலீசாரின் இந்த செயல்  மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இதனையடுத்து, காவல் துறையினரை கண்டித்து, மாண வர்கள் மீண்டும் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. தொடர்ந்து, போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்கு தலில் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி உள் ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து  ஆறுதலையும், நம்பிக்கையையும் தெரிவித்தனர்.