districts

img

மாணவர் சங்க பிரச்சார இயக்கம் நிறைவு

திருப்பூர், மே 29- அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கோரி இந்திய மாணவர் சங்கம் திருப்பூர்  மாவட்ட குழு சார்பில் நடைபெற்று வந்த  4 நாள் பிரச்சார இயக்கம் ஞாயிறன்று நிறைவடைந்தது.  அரசுப் பள்ளிகளை மேம்படுத்த  கோரி நடைபெற்ற 4 நாள் பிரச்சார  இயக்கம் ஞாயிறன்று இடுவம் பாளையம், முருகம்பாளையம், வீர பாண்டி மற்றும் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்த  பிரச்சார இயக்கத்திற்கு மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன் தலைமை  ஏற்றார். சிஐடி செயலாளர் சண்முகம், மாதர் சங்கம் முன்னாள் செயலாளர் அங்குலட்சுமி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தெற்கு ஒன்றிய செயலா ளர் சிந்தன், மாற்று திறனாளிகள் மாவட் டச் செயலாளர் ஜெயபால், தெற்கு மாநகர முன்னாள் வாலிபர் சங்க செய லாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கோரிக்கைகள் குறித்து மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அஹமது பேசினார்.  இறுதியாக மாணவர் சங்க மாநிலச்செய லாளர் நிரூபன் சக்ரவர்த்தி நிறைவுரை யாற்றினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் கள் கல்கி, ஷாலினி, கிருஷ்ணகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் மணி கண்டன், மோகனப்பிரியா, செயற்குழு  உறுப்பினர் சுதா சுஜிதா, மாவட்ட குழு  உறுப்பினர் உதயராஜ் உட்பட பலர் பங் கேற்றனர்.