திருப்பூர், டிச.29 - சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த கல்வி உதவித்தொகை மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உத வித்தொகையை ரத்து செய்துள்ள ஒன்றிய அரசின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் தேசம் தழுவிய அளவில் நடைபெற்ற கண் டன ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து திருப் பூர் சிடிசி கார்னரில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அஹமது, மாணவர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் சுபாஷ் பாரதி, திராவிடர் கழக மாவட்டச் செய லாளர் யாழ் ஆறுச்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுடலை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள். முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் அஹமது ஜெம்சீர் நன்றி கூறி னார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புக்களின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.