districts

img

தவறான வாக்குறுதி கொடுத்த தனியார் பள்ளி: ஓராண்டு கல்வி பறிபோனதாக மாணவி புகார்

திருப்பூர், டிச.30 – திருப்பூர் அருகே தனியார் பள்ளி யில் பிரெஞ்ச் மொழிப் பாடம் பொதுத் தேர்வில் எழுதலாம் என உறுதிய ளித்து மாணவியை சேர்த்துவிட்டு தற் போது அரசுப் பொதுத் தேர்வு எழுத  முடியாத நிலையை ஏற்படுத்தி இருப் பதாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும்  அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சிய ரிடம் புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மக்கள்  குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இதில், பெருமாநல்லூர் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சீமாஸ்ரீ என்ற மாணவி அவரது பெற் றோருடன் வந்து ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தார். இதில், ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யா லயா பள்ளியில் பிரெஞ்சு மொழி பொதுத்தேர்வு எழுதலாம் எனக் கூறி  சீமாஸ்ரீயை 12ஆம் வகுப்பில் சேர்த்த னர். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ரூ.68 ஆயிரம் கட்டணம் வசூலித்து, அடை யாள அட்டை மற்றும் பள்ளிச் சீருடை  வழங்கினர். அதன்பின் பள்ளி நிர்வா கம் பிரெஞ்சு மொழி பாடத்திற்கு வேறு ஒரு டியூசன் சென்டருக்குச் சென்று படிக்குமாறும், பொதுத் தேர்வை பள்ளியிலேயே எழுதலாம் எனவும் கூறினர். ஆனால், பள்ளி வருகை பதிவேட்டில் மாணவி பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த டிச.23ஆம் தேதி சீமாஸ்ரீ, பொருளாதார சிக்கல் காரணமாக வரும் மார்ச் மாதம் அரசு பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி  ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம்  சமர்ப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத் தினர் இவரிடம் கொடுத்துள்ளனர். இதை மாவட்ட ஆட்சியரகத்தில் விசா ரித்தபோது, கால தாமதம் காரண மாக தேர்வு எழுத முடியாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாண வியின் பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி  ஏற்படுத்தியுள்ளது. எனவே பொய் யான தகவல் அளித்த ஸ்ரீ விக்னேஸ் வரா வித்யாலயா மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவியின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு அரசுப் பொதுத்தேர்வு  எழுத அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவியுடன், பெற்றோர்கள் மனு அளித்தனர். வறண்டு கிடக்கும் வட்டமலை கரை:  வெள்ளக்கோயில், நாகமநாயக் கன்பட்டி ஊராட்சி, உத்தமபாளை யத்தில் வட்டமலை கரை ஓடை  அணை அமைந்துள்ளது. போது மான மழை இல்லாததால் இந்த அணை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது பிஏபி தொகுப்பு அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதை கருத்தில் கொண்டு, வட்டமலை கரை ஓடை அணைக்கு பிஏபி தண்ணீரை பெற்றுத் தந்து உதவ வேண்டும் என  விவசாயிகள் மனு அளித்தனர். திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் அவிநாசி பகு தியை சேர்ந்த தீபாவுக்கு கடந்த 13  ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள் ளது. குழந்தை பிறந்து சில நிமிடங் களிலேயே குழந்தைக்கு கையில் சிவப்பு நிறத்தில் ரத்தக்கட்டு போல் இருந்துள்ளது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல் லும்படி  மருத்துவர்கள் பரிந்துரைத்த னர். எனவே குழந்தையை பெற்றோர்  மற்றும் உறவினர்கள் கோவைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந் தையை பரிசோதித்த அரசு  மருத்து வர், குழந்தையை சீக்கிரம் எடுத்து வந் திருந்தால் குழந்தையின் கையை காப்பாற்றி இருக்கலாம், தற்போது குழந்தையின் கை சேதமடைந்து விட்டது. எனவே குழந்தையின் கையை அகற்றுவதைத் தவிர வேறு  வழி இல்லை என்று தெரிவித்துள்ள னர். இதையடுத்து  கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழந் தையின் கையை அகற்றியுள்ளனர். தவறான சிகிச்சை அளித்த திருப்பூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குழந்தையின் நல னைக் கருத்தில் கொண்டு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என பெற் றோர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்த னர். வீட்டுமனை பட்டாவிற்கு இடம் எங்கே? அவிநாசி தாலுகா, போத்தம்பா ளையம் ஊராட்சி, தண்ணீர் பந்தல்பா ளையம் கிராம மக்களுக்கு நவம்பர் 30  ஆம் தேதி இலவச வீட்டுமனை பட்டா  வழங்கப்பட்டது. ஆனால் நிலம் அளந்து தரப்படவில்லை. கொடுக் கப்பட்ட பட்டாவில் அக்டோபர் மாதம்  2025 ஆம் ஆண்டுக்குள் குடியமர வில்லை என்றால் நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தாம தம் இன்றி நிலம் அளந்து தர வேண் டும் என மக்கள் மனு அளித்தனர். ஆன்லைன் மோசடி: வேலம்பாளையம் பகுதியில் ஆன்லைன் எம்.எல்.எம் மூலமாக வருவாய் என கூறி 6 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20க்கும் மேற்பட்டோர் மனு அளித் தனர். பல்லடம் எம்ஜிஆர் சாலையில்  காமராஜருக்கு சிலை வைக்க வேண் டும் என காங்கிரஸ் கட்சியினர் மனு  அளித்தனர். இஎஸ்ஐ மருத்துவமனை அருகே டாஸ்மாக்: திருப்பூர் மாநகர், கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவ மனை அருகில் ரங்கநாதபுரம் இரண் டாவது வீதியில் டாஸ்மாக் மதுபான  கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறது. பல முறை அதிகாரிகளி டம் முறையிட்டும் கடை அகற்றப்பட வில்லை. எனவே உடனடியாக இந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம் யூனிஸ்ட் கட்சியினர் துணை மேயர்  பாலசுப்பிரமணியுடன் வந்து மனு அளித்தனர்.