நீலகிரி, டிச.25- நீட் தேர்வு தோல்வியால் கூட லூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக் குட்பட்ட பாரதி நகரில் வசித்து வரு பவர் அருளானந்தம். இவரது மனைவி புஷ்பா. இவர்களது இரண் டாவது மகள் ஜெயா (18), கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து 2வது முறை யாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இத் தேர்வில் தோல்வியடைந்த ஜெயா கடந்த டிச.18 ஆம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்ட பெற் றோர் கூடலூர் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். இதன்பின், மேல் சிசிக்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பல னின்றி ஜெயா உயிரிழந்தார். இது குறித்து ஓவேலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.
மாணவர் சங்கம் ஆவேசம்
இந்நிலையில், ஒன்றிய அரசு நீட் தேர்வில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும். உயிரி ழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோத்தகிரி மார்க்கெட் திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க கோத்த கிரி தாலுகா தலைவர் சுகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீலகிரி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ், தாலுகா செயலாளர் சச்சின், வாலிபர் சங்க தாலுகா தலைவர் சுந்தர், மாண வர் சங்க பொறுப்பாளர் குமரன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முன் னதாக, நீட் தேர்வினால் உயிரிழந்த கூடலூரை சேர்ந்த ஜெயாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ் சலி செலுத்தப்பட்டது.