districts

img

புத்தகப் பூக்களை மொய்த்த மாணவ தேனீக்கள்!

திருப்பூர், ஜன.30- திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.  திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து 21 வது ஆண்டு புத்த கத் திருவிழாவை காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல் மைதா னத்தில் நடத்தி வருகின்றனர். எட் டாம் நாளான வியாழனன்று பல் வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழா வுக்கு அழைத்து வரப்பட்டனர்.  கண் களில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் அந்த குழந்தை கள் ஒவ்வொரு புத்தக அரங்கமாக சென்று விருப்பமான புத்தகங் களை தேடிப் பார்த்தனர். ஆண் டுக்கு, ஆண்டு புத்தகத் திருவிழா விற்கு வரும் மாணவ மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவ தாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  மேலும், இந்த ஆண்டு குழந்தை கள் உண்டியலில் பணம் சேகரித்து புத்தகங்கள் வாங்கலாம் என்ற திட் டத்தை புத்தகத் திருவிழா குழுவி னர் அறிமுகப்படுத்தினர். இதனால் சேகரித்த பணத்தில் சொந்தமாக புத்தகம் வாங்கலாம் என்று கண் களில் தன்னம்பிக்கை மிளிர புத்த கங்களை பார்வையிட்டு வாங்கி னர். புத்தகத் திருவிழாவில் பங் கேற்ற குழந்தைகள் தங்கள் பெயர் பள்ளி விபரத்தை எழுதி நுழை வாயில் முன்பாக வைக்கப்பட்டி ருக்கும் பெட்டியில் போட வேண் டும். அதில் ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்படும் 10 மாணவ மாணவிகளுக்கு தலா 500 ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் வழங்கப் படும் என்று அறிவித்திருந்தனர். எனவே குழந்தைகள் மிகுந்த ஆர் வத்தோடு தங்கள் பெயரை குலுக் கல் சீட்டில் எழுதி பெட்டியில் போட் டனர். இந்த புத்தகத் திருவிழாவில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  அமைக்கப்பட்டுள்ள அரங்கங்க ளையும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்த னர். கடந்த சில ஆண்டுகளாக ஏற்க னவே வாசித்த புத்தகங்கள் அல் லது புதிய புத்தகங்களை சிறையில் இருக்கும் கைதிகளுக்கென உள்ள நூலகத்திற்கு கொடுப்பதற்காக சிறைத்துறை தனி ஏற்பாடு செய் திருந்தது. இந்த ஆண்டும் சிறைத் துறை தனி அரங்கு வைக்கப்பட்டி ருந்தது. பலர் மானுட நேயம், பண் பாட்டை வளர்க்கும் புத்தகங்களை அந்த அரங்கத்தில் சிறை கைதிக ளுக்காக மனமுவந்து ஒப்படைத்த னர். வரும் ஞாயிற்றுக்கிழமை புத்த கத் திருவிழா நிறைவடைய உள்ள தால் மூன்று நாட்களே உள்ள நிலை யில் புத்தக ஆர்வலர்கள் வருகை  அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்ப தாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.