விழுப்புரம், டிச. 31 - அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டச் செயலாளர் குமரவேல், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர், முன்னதாக மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பார்த்திபன் சங்க கொடியை ஏற்றினார். கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும், அரசு சட்டக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும், விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியை உடனடியாக திறக்க வேண்டும், கல்வி நிறுவனங்களில் நடைபெறும் சாதிய வன்கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அரசு அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரியை உருவாக்க வேண்டும், சட்டக் கல்வி கடைச் சரக்காவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைத் தலைவராக எம்.எழிலரசன், செயலாளராக மகேந்திரன் உள்ளிட்ட 10 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.