districts

img

சிபிஎம் சார்பில் மாணவர் கலைத் திருவிழா

கோவை, டிச.14- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது கோவை மாவட்ட  மாநாட்டை முன்னிட்டு மாணவர் கலைத் திருவிழா சனியன்று நடை பெற்றது. இதில், 200 க்கும் மேற் பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தனித்திறனை நிருபித்த னர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 24ஆவ மாநாடு வரும் டிச.23, 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெகு மக்கள் மத்தியில் கொண்டு செல் லும் வகையில், பல்வேறு வடிவங்க ளில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக “மாணவர் கலைத் திருவிழா” கோவை, காந்திபுரத்தில் உள்ள கேரளா சமாஜம் அரங்கில் சனி யன்று நடைபெற்றது. இதில், சமூ கம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைப்  போட்டி, பேச்சுப் போட்டி ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி, ரீல்ஸ்  போட்டிகள் நடைபெற்றது. இந்த கலை திருவிழாவில் 200க்கும் மேற் பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகள் கலந்து கொண்ட ஓவிய போட்டியில் பிரமீடு கள், இயற்கை சூழல் உள்ளிட்ட ஓவி யங்களை குழந்தைகள் வரைந்து  அசத்தினர். அதே போல சாதிய,  மத பாகுபாடுகள், சமூக பிரச்சனை கள் குறித்த தலைப்புகளில் நடை பெற்ற பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சமூகப் பிரச்சனைகளை மேற்கோள் காட்டி பேசினர். கட் டுரை போட்டியிலும் போதையால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாவது உள்ளிட்ட தலைப்புக ளில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு கட்டுரை எழுதி  அசத்தினர். தொடர்ந்து, விழிப்பு ணர்வு, கவன ஈர்ப்பு ரீல்ஸ் போட்டியி லும், மாணவர்கள் தங்கள் திறமை களை வெளிபடுத்தினர்.  முன்னதாக இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச்செயலாளர் சி. பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.ராதிகா, விஜயா பதிப்பகத் தின் உரிமையாளர் விஜயா வேலா யுதம் உள்ளிட்டோர் பங்கேற்று  மாணவர்களை உற்சாகப்படுத்தி னர்.