districts

img

சிப்காட்டுக்கு எதிர்ப்பு: பனை விதைகள் நட்டு போராட்டம்

நாமக்கல், அக்.22- நாமக்கல் அருகே அமையவுள்ள சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி பனை விதைகளை நடும் போராட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வளையப்பட்டி, என். புதுப்பட்டி, அரூர், பரளி  ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழக அரசு இத்திட்டத்தை ரத்து செய்யவில்லை. எனவே, சிப்காட் திட்டத்தை ரத்துச் செய்ய வலியுறுத்தி ஞாயிறன்று வளையப்பட்டி - மோகனூர் சாலையில்  உள்ள சிப்காட் எதிர்ப்புக் குழு  அலுவலகத்தில் கே.பாலசுப்பிரமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாய தோட்டங்களில்  வரப்புகளில் முதல் தவணையாக 25 ஆயிரம் பனைவிதைகள்  நடவு செய்யப்படும். ஆறு மாதத்தில் விவசாய நிலங்களின் பத்து லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்படும். பின்னர், ஒரு ஆண்டிற்குள் ஒரு கோடி பனை விதைகள் நடவுசெய்து இந்த பகுதியில் சிப்காட்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பனை சாகுபடிக்கு முன்னோடியாக  மாற்றப்படும். இந்த நிகழ்வை, கின்னஸ் சாதனை நிகழ்த்திடவும் முடிவு செய்யப்பட்டன. இதையடுத்து, பனை விதை நடவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.