districts

img

பிரச்சனைகளை தீர்க்குமா தமிழக அரசு? மக்கள் எதிர்பார்ப்பு - - ஜி.லெனின் -

- ஜி.லெனின் - தருமபுரி, டிச.12- மயான வசதி இல்லாததால், இறந்தவர்களை வீட்டின் அருகி லேயே புதைக்கும் அவல நிலையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டத்தில் பிக்கனஅள்ளி, ஜிட் டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம், அண்ணாமலைஅள்ளி, ஐக்கசமுத்தி ரம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர், இருளர், குருமன்ஸ் ஆகிய சமூக மக்கள் அதிகளவில் வசித்து வரு கின்றனர். மிகவும் பின்தங்கிய நிலை யில் வாழும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 100 ஆண்டுகளாக மேற் கண்ட ஊராட்சிகளில் சுமார் 5 ஆயி ரம் ஏக்கர் அனுபவ நிலத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். அனைவரும் அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்துள்ள சிறு விவசாயிகள். நஞ்சை, புஞ்சை என இருவகை நிலங் களிலும் மா, தென்னை, வாழை, நாக மரம் மற்றும் நெல், ராகி, தக்காளி, சோளம், கம்பு மற்றும் காய்கறிகளை யும் பயிரிட்டு, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதி மக்க ளுக்கு விவசாயத்தை தவிர வேறு  வாழ்வாதாரம் ஏதுமில்லை. இவர்க ளில் பெரும்பகுதியினர் விவசாய நிலத்திலேயே வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, ரேசன்  கடை, பள்ளி, ஆதார் அட்டை, வாக் காளர் அடையாள அட்டை என உள் ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. வனத்துறையின் போக்கு கரடு முரடாக இருந்த நிலத்தை, தன் சொந்த குடும்ப உழைப்பில் சமன் செய்து சாகுபடி செய்து வருகின்ற னர். தருமபுரி, கிருஷ்ணகிரி ஒன்று பட்ட மாவட்டமாக இருந்த போது, கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மூலம்  இந்த நிலத்தில் செய்த சாகுபடி விவ சாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.  இந்நிலையில், 1988 ஆம் ஆண்டி லிருந்து சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நிலங்களை,  வருவாய் துறையினர் வனத்துறையி டம் ஒப்படைத்து விட்டதாகக்கூறி விவ சாயிகளை வனத்துறையினர் வெளி யேற்ற முயற்சி செய்து வருகின்றனர். மேலும், வனத்துறையினர் மாமரங்க ளுக்கு வரி கட்ட வேண்டும் என நிர் பந்தம் செய்கிறனர். எனவே, இப் போக்கை வனத்துறை கைவிட வேண் டும். 2006 ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட பாரம்பரியமாக வனத்தை சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தின்படி, நிலப்பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும்  என வலியுறுத்தி தமிழ்நாடு விவசா யிகள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றன. தக்காளி ஜூஸ் தொழிற்சாலை பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி  விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளியை, பாலக் கோட்டிலுள்ள தக்காளி மார்க்கெட் டுக்கு விற்பனைக்கு கொண்டு செல் கின்றனர். இச்சந்தையில் தினந் தோறும் 200 முதல் 500 டன் தக்காளி  (வரத்தை பொறுத்து) விற்பனையாகி றது. உள்ளூர், வெளி மாவட்டம் மற் றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். தக்காளியின் வரத்து  அதிகரித்ததால் விலை குறைகிறது. இதனால் விவசாயிகள் கவலையடை கின்றனர். சில நேரங்களில் பருவ மழையின் காரணமாக தக்காளி செடி யிலேயே அழுகும் நிலை ஏற்படுகி றது. அப்போதும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தக்காளி விளைச்சல் குறைவால் திடீரென ஒரு கிலோ தக்காளி ரூ.100யை தாண்டு கிறது. சில சமயங்களில் வரத்து அதி கரித்தால், வாங்க ஆளில்லாமல் தக் காளிகளை குப்பையில் கொட்டும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, தக் காளிக்கு கட்டுப்படியான விலை  கிடைக்கவும், அதிகமாக விளைச்சல் தரும் தக்காளியை பயன்படுத்த பாலக்கோட்டில் தக்காளி ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இதன்மூலம் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்; அதுமட்டுமின்றி இளைஞர்களுக்கு வேலை வாய்ப் பும் கிடைக்கும்.

ஊராட்சிகளை இணைத்திடுக

பாலக்கோடு வருவாய் வட்டத் தில் ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திர மங்கலம், ஜக்கசமுத்திரம், பிக்கன அள்ளி, அண்ணாமலைஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் 35 கிராமங் கள் உள்ளன. பாலக்கோட்டில் உள்ள  இந்த 5 ஊராட்சிளும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியுள் ளது. இந்த 5 ஊராட்சியில் உள்ள மக்க ளுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, அரசு வீடு, உள்ளிட்ட தேவை களுக்கு நீண்ட தொலைவில் உள்ள  காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலு வலகத்திற்கு செல்ல வேண்டும். இந்த  ஊராட்சியில் உள்ள பெரும்பகுதி கிராமங்கள் மலை கிராமங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமங்க ளுக்கு மிக அருகாமையில் இருப்பது பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலு வலகம் எனவே இந்த 5 ஊராட்சி களை பாலக்கோடு வட்டார வளர்ச்சி  அலுலகத்துடன் இணைக்க வேண் டும். தனி ஊராட்சி ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சிக்குட் பட்ட குண்டங்காடு கிராமத்தையெட்டி சுமார் 3 கிலோ மீட்டர் எல்லைக்குள் மேற்கண்ட 5 ஊராட்சிகளின் கிரா மங்கள் உள்ளன. எனவே மலை கிராமங்களான குண்டங்காடு, திம்ம ராயன அள்ளி, கொத்தளம், பாறை  கொட்டாய், போடா அள்ளி, முருக் கன்கொட்டாய், கம்பாரகட்டு, முத்தா லம்மன் பள்ளம் ஆகிய கிராம பகு தியைப் சேர்த்து குண்டங்காடு பகு தியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.

மயான வசதி இல்லை: நீடிக்கும் அவலம்

குப்பன்கொட்டாய் கிராமத்தில் 300 போயர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இங்குள்ளவர்கள் இறந்தால் அருகிலுள்ள வாழை தோட்டம் என்ற  இடத்தில் உள்ள மயானத்தில் அடக் கம் செய்து வந்தனர். மாற்று சமூகத் தினர் அந்த மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்காததால், இறந்த வர்களை தன் வீட்டின் அருகே அடக் கம் செய்யும் அவலநிலை நீண்ட  ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. இக்கிராம மக்கள் நீண்ட ஆண்டுகால மாக கோரிக்கை வைத்தும் மயான வசதி ஏற்படுத்தவில்லை என்பதே இம் மக்களின் வேதனை. இன்று சிபிஎம் மாநாடு துவக்கம் பாலக்கோடு வட்டத்தில் நீண்ட ஆண்டுகாலமாக விவசாயம் செய்து குடியிருந்து வரும் மக்களுக்கு மனை பட்டா, நிலப்பட்டா, மயானவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தொடர் போராட்டங்களை நடத்தி வரு கிறது. இந்நிலையில், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்  விரைந்து தீர்வு காண நடவடிக்கை  எடுக்க வேண்டும், என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தருமபுரி மாவட்ட 24 ஆவது மாநாடு  பாலக்கோட்டில் டிச.13ஆம் தேதி யன்று (இன்று) பேரணி. பொதுக் கூட்டத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, டிச.14, 15 ஆகிய தேதி களில் பிரதிநிதிகள் மாநாடு நடை பெறவுள்ளது.