உடுமலை, டிச.6- ஊராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.8.50 காசுக்கு விநியோகித்து வந்த நிலையில், தற்போது ரூ.13.60 காசாக அதிகரித்துள்ளனர். இதற்கு ஒன் றியக்குழு கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் உடுமலை ஒன் றிய அலுவலகத்தில் புதனன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை ஊராட்சி பகுதிகள், குடிமங்கலம், உடுமலை நகர பகுதிகளுக்கு கணக்கம்பளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.8.50 காசுக்கு விநி யோகித்து வந்த நிலையில், தற்போது ரூ.13.60 காசாக அதிகரித்துள்ளனர். இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். திரு மூர்த்தி அணையில் போதிய நீர் உள்ள நிலையில், ஊராட்சி பகுதி முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப டுகிறது. இந்நிலையில், பொது மக்க ளுக்கு வழங்கும் குடிநீருக்கு எவ்வித முன் அறிவிப்பின்றி விலை உயர்த்தப் பட்டுள்ளது. மழைக் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்க ளுக்கு ஏற்படும் காய்ச்சல் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது சுகாதார திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செல வுகள் மற்றும் இதர திட்டங்களுக்கான 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன், துணைத் தலை வர் சண்முகவடிவேல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவி மற்றும் சுப்பிரமணி யன் உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.