கோவை, மே 27– அவசர கூட்டம் என அறிவித்து விட்டு, 83 தீர்மானங்களை முன் மொழிவதா என கோவை மாநக ராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப் பினர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். கோவை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் வியாழன்று மேயர் கல் பனா தலைமையில் நடைபெற் றது. இதில் மாநகராட்சியில் செயல் படுத்தப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக 83 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாமன்ற உறுப் பினர்கள், அவரச கூட்டத்தில் இத் தனை தீர்மானங்களை முன் வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் வி.இராம மூர்த்தி பேசுகையில், அவசர கூட் டம் என்றால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று தீர்மானங்கள் மட்டுமே முன்வைக்க முடியும். அதுவும், 24 மணிநேரத்திற்கு முன் பாக மாமன்ற உறுப்பினர்களுக்கு பொருள் குறித்த அறிக்கையை தரவேண்டும். ஆனால், கொடுக்கப் பட்ட பொருள் குறித்து குறைந்த பட்சம் படித்து தெரிந்து கொள்ள உரிய கால அவகாசம் வழங்கா மல் 83 தீர்மானங்களை கொண்டு வந்துள்ளீர்கள். இந்த மாமன்றத் தில் பெரும்பாலான கவுன்சிலர் கள் புதியவர்கள். அவர்களுக்கு புரிந்து கொள்வதே சிரமம். குறு கிய கால ஏற்பாட்டில் இவ்வளவு பொருள்கள் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார். இதே போன்று திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் மேயரி டம் கேள்வியெழுப்பினர். மேலும், இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 13 தீர்மானங் களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து மேயர், அதி காரிகளை பார்த்து தீர்மானங் களை எங்களிடம் கொடுத்துவிட்டு நீங்கள் அமைதியாக அமர்ந்து கொண்டுள்ளீர்கள். இப்போது மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்கிறார்கள் நீங்களே பதில் சொல்லுங்கள். நீங்கள் செய்கிற தவறுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று கடிந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பேசிய மேயர், அனைத்து பொருள்களும் பல்வேறு கூட்டத் தில் விவாதிக்கப்பட்டு பின்னர் தான் தீர்மானத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. கவுன்சிலர்க ளின் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டத்தில் தீர்மான பொருள் குறித்த அறிக்கை முன்னதாகவே வழங்கப்படும் என்றார். இதனை யடுத்து கூட்டம் சுமூகமாக நடை பெற்றது. இதனையடுத்து பேசிய கவுன் சிலர்கள், மாநகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கு அனுமதி பெறு வது மிகவும் தாமதமாகிறது. பொதுமக்கள் தரப்பிலிருந்து அளிக்கப்படும் விண்ணப்பங்க ளில் 50 முதல் 60 சதவீதம் வரை யிலான விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்படுகின்றன. இதற்கு அதிகா ரிகளின் அலட்சியமே காரணம். மண்டல அலுவலகங்களுக்கு கூடு தல் உதவி நகரமைப்பு அலுவலர் களை நியமிக்க வேண்டும். மாநக ராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலான பொதுப் பயன் பாட்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன அவற்றை மீட்க வேண் டும். வ.உ.சி. பொழுதுபோக்கு மற்றும் சிறுவர் பூங்காவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். விளையாட்டு உபகர ணங்களை புதுப்பிக்க வேண்டும். மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவை தக்க வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினர்.
சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு
மேலும், கோவை மாநகராட்சி யில் 100 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற தீர்மானத் தில், சொத்துவரி குறித்த மாநில அரசின் அரசாணையை மாமன்ற உறுப்பினர்களிடம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து மன்ற உறுப்பினர்கள் புரிந்து கொண்டு விவாதித்தால் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், மன்ற உறுப் பினர்களுக்கு சொத்துவரி குறித்த அரசாணையை கொடுக்காமல் சொத்துவரி தீர்மானத்தை நிறை வேற்றக் கூடாது என சிபிஎம் கவுன் சிலர் வி.இராமமூர்த்தி பேசினார். இதேபோன்று காங்கிரஸ் கவுன் சிலர்கள் நவீன், அழகு ஜெயபா லன், ம.தி.மு.க. இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சாந்தி உள்ளிட்ட கவுன்சிலர்களும் சொத்து வரி உயர்விற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். மாலை 3.15 மணிக்கு ஆரம்பித்த இந்த அவசர கூட்டம் இரவு 9 மணி வரை நீண்டு கொண்டி ருந்த நிலையில் முடிவில் மேயர் கல்பனா, இந்த சொத்து வரி உயர்வு அனுமதிக்கப்பட்டது என் றார். இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். அப்போது உங்கள் கருத்துக் களை பதிவு செய்து கொள்கி றோம் இந்த சொத்துவரி அனு மதிக்கப்பட்டது என்று மீண்டும் மேயர் தெரிவித்தார். மாமன்ற கூட் டத்தின் நிறைவாக மூன்று தீர்மா னங்கள் மட்டும் ஒத்திவைக்கப் பட்டு சொத்துவரி உயர்வு உள் ளிட்ட இதர தீர்மானங்கள் அனைத் தும் நிறைவேற்றப்பட்டது.