தருமபுரி, ஜூன் 26- சட்டவிரோத சாராய விற்ப னைக்கு துணைபோகும் அதிகாரி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாரா யத்தால் 60க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளனர். இந்நிலையில், சாராய விற்பனைக்கு துணை போகும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவரையும் குற்ற வாளிகளாக சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் உள் ளிட்ட போதைப்பொருட்கள் புழக் கத்தை முற்றிலுமாக ஒழிக்க தமிழ் நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தனி சிறப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து, பூரண மதுவி லக்கு அமல்படுத்த வேண்டும். கள் ளக்குறிச்சி விஷச்சாராய உயிரி ழப்புக்கு காரணமான காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலா ளர் தி.வ.தனுசன் தலைமை வகித் தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.குமார், மாவட்டக் குழு உறுப்பினர் சி.வஞ்சி, மூத்த தோழர்கள் தீர்த்தகிரி, சேகர், வட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ் ணவேணி, கண்ணகி, அம்புரோஸ் மற்றும் பொன்னுசாமி, செல்வம், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் குப்பன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு மாநகரச் செயலாளர் எம். கனகராஜ் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராம மூர்த்தி, ஐ.ஞானசௌந்தரி, என்.குணசேகரன், கிழக்கு மாநகரச் செயலாளர் பொன்.ரமணி, வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்கு மார், தாலுகாச் செயலாளர் கே. எஸ்.பழனிசாமி, பனமரத்துப்பட்டி செயலாளர் கே.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதகை நீலகிரி மாவட்டம் ஏடிசி திடல் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆஸரா தலைமை வகித்தார். இதில் சிபிஎம் உதகை தாலுகா செயலாளர் நவீன்சந்தி ரன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எல்.சங்கரலிங்கம், தாலுகா குழு உறுப்பினர் புட்டுசாமி, பரி மளம் மற்றும் மாதர் சங்க நிர்வாகி கள் ஜெயலட்சுமி, தமிழ்மணி, பானுமதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், மாதர் சங்க தாலுகா பொருளாளர் பிரமிளா நன்றி கூறினார்.