கோவை, டிச.10- பொதுமக்களின் கோரிக்கையையேற்று சுமார் மூன்று ஆண்டுக ளுக்குப் பிறகு இயக்கப் பட்ட பேருந்தால் பொது மக்கள், பள்ளி மாணவர் கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். கோவை மாவட்டம், மருதமலை சாலை கல்வீரம்பாளை யம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி யில், கணுவாய், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கணுவாய் பகுதி யில் இருந்து கல்வீரம்பாளையம் பகுதிக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் இல்லாததால் ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் மாணவர்கள் சென்று படித்து வரு கின்றனர். சுமார் 5 கிமீ தூரம் உள்ள இந்த இடைவெளியை தனி யார் வாகனங்கள் மூலமாகவோ அல்லது நடந்து சென்றோ படித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களும் பொது போக்குவரத்து இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதியில் சோமையம்பாளையம் வரை மட்டும் ஒரே ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த அரசு பேருந்தை பள்ளி மாணவர்களுக்காவது கல்வீரம்பாளையம் பகுதி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மனு மீது தற்போது நடவடிக்கை எடுக் கப்பட்டு தற்பொழுது அரசு பேருந்தானது கணுவாய் பகுதி யில் இருந்து கல்வீரம்பாளையம் பகுதி வரை நீட்டித்து இயக் கப்பட்டுள்ளது. திங்களன்று முதல் இந்த பேருந்து சேவை யானது துவங்கி உள்ள நிலையில் செவ்வாயன்று அதனை பொதுமக்களும், ஆணிவேர் அமைப்பினரும் சோமையம் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்பு கள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்வை தெரிவித்தனர்.