districts

img

6 ஆம் நம்பர் பீல்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

சேலம், அக்.20- ஏற்காடு ஆறாம் நம்பர் பீல்ட்  சாலை அமைக்க அரசு முழுமை யான நடவடிக்கை எடுக்கும், என சிஐடியு தலைவர்களிடம், சுற் றுலாத்துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு, கொட்டச்சேடு பகுதியிலிருந்து பல  கிராமங்கள் பயன்படும் வகை யில், அமைக்கப்பட்ட ஆறாம் நம்பர்  மண் சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரி, சிஐடியு-வினர் நீண்ட  கால போராட்டத்தை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர்  ராமன், அதற்கான பணிகளில் ஈடுபட்டார். அவர் மாறுதலாகி யதைத் தொடர்ந்து, புதிய ஆட்சிய ராக பொறுப்பேற்ற கார்மேகம், இத் திட்டத்தை எஸ்டேட் முதலாளிக ளுக்கு ஆதரவாக ஏழாம் நம்பர்  பீல்ட் சாலையாக அமைக்கப்பட் டது. இந்த சாலை மக்களுக்கு முழு மையாக பயன் தரவில்லை என  அப்பகுதி பொதுமக்களும், சிஐ டியு-வினரும் நீதி மன்றத்தில்  வழக் குகள் தொடர்ந்தனர். இந்நிலை யில், மக்கள் பயன்பாட்டில் இருந்த  ஆறாம் நம்பர் சாலையை தொடர்ந்து மக்கள் பயன்படுத்தும்  வகையில் சீர்படுத்தி, பேருந்து  வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என  வலியுறுத்தி, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரனி டம், சிஐடியு தலைவர்கள் மற்றும்  பொதுமக்கள் சனியன்று மனு அளித்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுசம்பந்தமாக உரிய  முறையில் தீர்வு காணப்படும் என வும், ஆறாம் நம்பர் பீல்ட் மண் சாலையை தரம் உயர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும், என உறுதியளித்தார். முன்னதாக, இந் நிகழ்வில் சிஐடியு சாலை போக்கு வரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், பொருளாளர் வி. இளங்கோ, நிர்வாகிகள் ஆர்.வெங் கடபதி, பி.பன்னீர்செல்வம், போக் குவரத்து சங்க மண்டல பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கொட்டச்சேடு ஊர் தலைவர்கள் கிருஷ்ணன், பழனியப்பன், பழனி சாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.