districts

img

பழுதடைந்த வீட்டு வசதி குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதியதாக கட்ட நடவடிக்கை - அமைச்சர் சு.முத்துச்சாமி தகவல்

சேலம், ஏப்.11- தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியி ருப்புகளை அகற்றிவிட்டு, புதிய தாக கட்டப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு அலுவலர் வாடகை குடியி ருப்பு, சேலம் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள அய்யந்திரு மாளிகை அரசு அலுவலர் வாடகை  குடியிருப்பு பகுதிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்து சாமி ஞாயிறன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் அமைச்சர் சு.முத்து சாமி செய்தியாளர்களிடம் கூறு கையில், சங்ககிரியில் உள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு பழுதான நிலையில் உள்ளதால், அதே இடத்தில் புதிய குடியிருப்பு கள் கட்டுவதற்கான ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வசித்து வரும் குடியிருப்புகளும் பழுதான நிலையில் உள்ளதால், அதை சீர் செய்வதற்கு தேவையான நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளது. சேல

சேலம், கோரிமேடு அருகில்  உள்ள அய்யம்பெருமாள்பட்டி குடி யிருப்பு பகுதியில் அமைந்துள்ள 114 வீடுகள் ஆய்வு செய்யப்பட் டது. இந்த பகுதிக்கு சாலை உள் ளிட்ட தேவையான வசதிகளை  மேம்படுத்தி இக்குடியிருப்பு களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொள் ளப்பட்டது. இக்குடியிருப்பு அருகி லேயே குடிசை மாற்று வாரியத் தின் சார்பில் குடியிருப்புகள் அமைந்துள்ளது. அக்குடியிருப்பு களில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார். மேலும், சேலம் அய்யந்திரு மாளிகை அரசு அலுவலர் வாடகை குடியிருப்பில் 658 வீடுகளும், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவ லகம் அருகில் 96 வீடுகளும் தற் பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள காரணத்தி னால் மேம்படுத்துவது தொடர் பாக மாவட்ட ஆட்சியர் மற்றும்  துறை சார்ந்த அலுவலர்களு டன் ஆலோசனை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற் படுத்தாத வகையில் புதிய கட்டி டங்கள் கட்டப்பட்டு அவர்க ளுக்கே மீண்டும் வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நீர் நிலைகளில் கட்டப்பட் டுள்ள குடியிருப்பு வீடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக் கப்படும். தமிழகத்தில் 195 இடங் களில் வீட்டு வசதி குடியிருப்பு கள் உள்ளன. இதில் 60 இடங்களில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பு களை இடித்து புதியதாக கட்ட நட வடிக்கை எடுக்கப்படும். மேலும், வாடகை நிலுவை கட்டணத்தை வசூலிக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சு.முத்துச்சாமி தெரி வித்தார். முன்னதாக, இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாநகராட்சி ஆணையர் தா.கிறிஸ்துராஜ், மேயர் ஆ.ராமச்சந்திரன், துணை  மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். சிவலிங்கம், வருவாய் கோட்டாட் சியர்கள், வீட்டு வசதித்துறை கண் காணிப்புப் பொறியாளர் சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.