அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில், மாநில அளவிலான தொழிற்சங்க பயிற்சி முகாம், கோவையில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இம்முகாமிற்கு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மாநிலத் தலைவர் சுனில்குமார் தலைமை வகித்தார். மேலும், மாநில உதவித் தலைவர் என்.சுப்பிரமணியம், கோவை மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க இணைச் செயலாளர் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர் டி.ரவிக் குமார், அகில கேரளா ஓய்வூதியர் சங்க தலைவர் என்.சுரேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.