சேலம், ஜூன் 25- சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் மற்றும் பைஸப்ஸ் லிப்டிங் போட்டிகளில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடியில் மாருதி பவர் ஜிம் சார்பில், ஓபன் பைசப்ஸ் லிப்ட்டிங் மற்றும் ஆணழகன் போட்டி, பைசப்ஸ் லிப்டிங் சங்க மாநில நிர்வாகிகள் முரளி, சக்திவேல் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. இப்போட்டிகளில் சேலம், நாமக்கல், தரும புரி, ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் தங்களது உடல் திறனை வெளிப்படுத்தி, சேலம் மாவட்டம், எடப்பாடி யைச் சேர்ந்த கணேசன் மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் முதல் பரிசுகளை தட்டிச் சென்றனர். மேலும், சிறந்த வீரர் களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.