அவிநாசி, ஆக.16 - அவிநாசி அருகே சேவூரில் மாநில அளவிலான ஏழாவது கால்பந்து போட்டி நடைபெற்றது. சேவூர் கால் பந்து கழகம் சார்பில் மாநில அளவி லான ஐவர் கால்பந்து போட்டி சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடை பெற்றது. இதில், 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் திருப் பூர் ஜூனியர்ஸ் அணி முதல் பரிசை தட் டிச்சென்றது. இரண்டாவது பரிசை சேவூர் கால்பந்து கழக அணியும், மூன் றாவது பரிசை பல்லடம் அகரம் அணி யும், நான்காவது பரிசை கோவை நேரு கல்லூரி அணியும் வென்றன. மேலும் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான விருது திருப்பூர் ஜூனியர் அணி வீரர் சுரேஷுக் கும், சிறந்த தடுப்பாட்டக்காரர் விருது சேவூர் கால்பந்து கழக அணி வீரர் திவா கருக்கும், சிறந்த கோல்கீப்பர் விருது, சேவூர் கால்பந்து கழக அணி வீரர் ஞான சேகருக்கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ.15ஆயிரம் மற்றும் கோப்பை யும், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற் றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்கா வது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப் பையும் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த ஆட்டநாயகன் விருது, தடுப்பாட்டக் காரர் விருது மற்றும் கோல்கீப்பர் விரு துகள் வழங்கப்படடன. சேவூர் கால்பந்து கழக தலைவர் எஸ்.கே.கனகராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், சேவூர் கால் பந்து கழகத் துணைத்தலைவரும், முறி யாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான ப.ரவிக்குமார் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழ ங்கினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற கால்பந்து போட்டிகளை பார்க்க ரசி கர்கள் ஏராளமானோர் வந்திருந்து வீரர் களை உற்சாகப்படுத்தினர்.