districts

img

இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில மாநாடு சேலத்தில் வரவேற்பு குழு அமைப்பு

சேலம், நவ.11- இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு சேலம் மாவட்டத்தில் டிசம்பர்  17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்புக் குழு கூட்டம் சேலத் தில் நடைபெற்றது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு மாநில மாநாடு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவராக சிஐடியு மாநில துணைத் தலை வர் டி.உதயகுமார், செயலாளராக எஸ்.தீனத யாளன், பொருளாளராக பரிதிராஜா மற்றும் 10 துணைத்தலைவர்கள், 15 இணைச்செயலா ளர்கள் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது.  இந்த கூட்டத்தில், அகில இந்திய துணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர். வங்கி ஊழியர் சம்மேளன மாநாட்டில் 450க்கும் மேற்பட்ட பிரதிநிதி களும், பேரணியில் 2000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களும் பங்கேற்பது என இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.