districts

img

நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலினின் ஆட்சி

தமிழ்நாட்டினை அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், மாநிலத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனிலும் அதீத அக்கறைக் கொண்டு, மக்களின் மனங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றால் அதுமிகையில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வ ராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்றையதினமே, கையொப்ப மிட்ட முத்தான ஐந்து திட்டங்களில் பெண்க ளுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால்  விலை குறைப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிட தனித்துறை ஆகியவை  குறிப்பிடத் தக்கவையாகும். அனைத்துத் துறை களிலும் முதலிடத்திலும், முன்னணியிலும் தமிழ் நாட்டினை முன்னிறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலி னின் ஆட்சி நான்காம் ஆண்டில் நம்பிக்கை யோடு அடியெடுத்து வைத்துள்ளது. முத்தான  திட்டங்களைப் பற்றி தமிழ்நாட்டின் திக்கெட்டி லும் உள்ள ஏழை எளியோர், பயனடைந்தோர் உள்ளன்போடும், உணர்ச்சிப் பெருக்கோடும் பகிர்ந்த கருத்துக்கள்:

1.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்
கண்ணம்மாள். காடாம்பாடி

நான் சூலூர் வட்டம், காடாம்பாடி கிராமம்,  செங்கத்துறை, மேற்கு வீதி பகுதியில் வசித்து  வருகிறேன். எனது கணவரால் எந்த வேலையும் செய்ய இயலாது. வயதான காலத்தில் எந்த வொரு வருமானமும் இல்லாமல் இருவரும் வறு மையில் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் கலை ஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப் பித்தேன். அதனைத்தொடர்ந்து, பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு, ரூ.1000 என்னுடைய வங்கி  கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த  தொகை எங்கள் குடும்பத்திற்கு மிகவும் உதவி யாக இருக்கும். அவசிய தேவைக்கு யாரிடமும் எதிர்பார்க்காமல், அத்தியாவசிய செலவு மற்றும்  எங்களது மருத்துவ செலவிற்கும் இத்தொகை  மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னை போன்ற ஏழை பெண்களின் வாழ்விற்கு உதவி யாக இருக்கும் இச்சிறப்பான திட்டத்தை செயல் படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வருக்கு என் மன மார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

2.விடியல் பயணத்திட்டம்
எஸ்.மகாராணி, ராமநாதபுரம்

சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வரும் நான், எனது  வீட்டிலிருந்து, தினமும் வேலைக்கு சென்று வர  இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டி யுள்ளது. பேருந்து கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.40  வரை செலவாகும். என் சம்பளத்தில் கால் பங்கு பேருந்து கட்டணத்திற்கே சரியாக இருந்த  நிலையில் மீதமுள்ள பணத்தைத்தான் என் குடும் பத்திற்கு வழங்கும் நிலை இருந்தது. இந்நிலை யில், தமிழ்நாடு முதல்வர் அறிவித்த மகளிர் இல வச பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் தினமும்  வீட்டிலிருந்து வேலைக்கு நகரப் பேருந்தில் கட்ட ணமில்லாமல் பயணம் செய்து வருகிறேன். இத னால் எனக்கு மாதம் ரூ.1200 வரை செலவு  குறைந்துள்ளது. இது எனக்கு மட்டுமில்லாமல் என்னை போன்ற வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது, என்றார்.

3.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
மாணவி தேஜாஸ்ரீயின் தாயார், ராமநாதபுரம் 

என்னுடைய மூத்த மகள் மாநகராட்சி ஆரம் பப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.  தினமும் காலையில் என் மகளை பள்ளியில் விட்டுட்டுதான் என் கணவர் வேலைக்கு செல்வ வேண்டி இருப்பதால் நேரமாகவே, வீட்டிலி ருந்து காலை 8.15 மணிக்கே இருசக்கர வாகனத் தில் பள்ளி செல்ல வேண்டியது இருக்கிறது. என்  மகள் தினமும் காலையில் சாப்பிட மிகவும்  அடம்பிடிப்பாள், சரியாக சாப்பிடமாட்டாள், சில நாட்கள் சாப்பிடாமலே பள்ளிக்கு செல்வாள். இது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை அளித் தது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம், என் மகள்  பள்ளியில் காலை உணவை மற்ற குழந்தைகளு டன் சேர்ந்து சாப்பிடும்போது அடம்பிடிக்காமல் முழு உணவையும் விரைவாக சாப்பிடுகிறாள். தினந்தோறும் ஒவ்வொரு விதமான காலை  உணவு வழங்குவதாலும், மற்ற குழந்தைகளு டன் சேர்ந்து சாப்பிடுவதாலும், காலை உணவை  முழுமையாக சாப்பிட்டு படிப்பில் கவனம் செலுத் துவாள் என நம்பிக்கை இருக்கிறது, என்றார்.

3. புதுமைப்பெண் திட்டம் மாணவி அ.நஸ்ரின், ராமநாதபுரம்

நான் கோவை அரசு கலை அறிவியல் கல்லூ ரியில் பி.காம் (சிஏ) இரண்டாமாண்டு பயின்று  வருகிறேன். எனது பெற்றோர் கூலி வேலைக்கு  செல்கின்றனர். என்னுடைய படிப்பிற்கு தேவை யான செலவுகளை மேற்கொள்ள என்னு டைய தந்தையின் வருமானம் போதுமானதாக  இருக்கவில்லை. என்னுடைய படிப்பை தொடர முடியுமா? என்ற கவலை எனக்கு இருந்தது.  இருந்தாலும், உயர்கல்வி பயில வேண்டும்  என்ற என்னுடைய கனவை நினைவாக்க வேண் டும் என்ற எண்ணத்தில் என்னுடைய பெற் றோர் என்னை மிகவும் சிரமம்பட்டு படிக்க  வைத்து வந்தார்கள். இந்நிலையில் முதல்வர்  மு.க.ஸ்டாலினின் மூவலூர் இராமமிர்தம் அம் மையார் உயர் கல்வி உறுதி திட்டம் குறித்து அறிந் தேன். அதனைத்தொடர்ந்து, சமூகநலத்து றையை அணுகி இத்திட்டத்திற்கு விண்ணப்பித் தேன். இத்திட்டத்தின் கீழ் தற்போது எனக்கு  ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை கிடைத்து வருகின்றது. இந்த உதவித்தொகை யினை கொண்டு, என்னுடைய படிப்பிற்கான  தேர்வுக் கட்டணம், புத்தகம் வாங்கும் செலவு களை மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய  உயர்கல்வி படிப்பை தொடர ஊக்குவித்த முதல் வருக்கு என்னைப்போன்ற மாணவிகளின் சார் பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

4.மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

நான் ஆர்.எஸ்.புரம் சுக்ரவார் பேட்டையில் என் தாயாருடன் வசித்து வருகிறேன். கடந்த 2019  ஆம் ஆண்டு மிகுந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  மேற்கொண்டேன். ஆனால், சில மாதங்களில் என்னுடைய உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்து நடக்கமுடியாத நிலைக்கு ஆளா னேன். என்னை பரிசோதித்த மருத்துவர்கள் எனக்கு முதுகு தண்டுவடம் மற்றும் அனைத்து மூட்டுகளிலும் செயல் இயக்க பாதிப்பு அதிக மாக இருப்பதினால் நடப்பதற்கு மிகவும் சிரமம்  என்று கூறிவிட்டனர். என்னுடைய அன்றாட தேவைகளை நானே செய்துகொள்ள முடியா மல் மிகவும் சிரமப்பட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல், நாங்கள் தவித்தபோது மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்,  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பேலி யேட்டிவ் செவிலியர் மற்றும் இயன்முறை மருத் துவர் எங்கள் வீட்டிற்கே வந்து மருத்துவ உதவிக ளையும் ஆலோசனைகளையும் அளித்தனர். சிகிச்சையின் பலனாக முதலில் நான் ஒரு வரு டத்தில் நிற்க ஆரம்பித்தேன். பிறகு நடைவண்டி  உதவியுடன் நடக்க பயிற்சி அளித்தனர். தற் போது என்னால் நடைவண்டி உதவியின்றி சிறிது  நேரம் நடக்க முடிகிறது. எனது அன்றாட வேலை களை என்னால் செய்துகொள்ள முடிகிறது. இத் திட்டத்தின் கீழ் எனக்கு மறுவாழ்வு அளித்து,  வீடு தேடி வந்து மருத்துவ உதவி அளிக்க கார ணமாக தமிழ்நாடு முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

5.இன்னுயிர் காப்போம் திட்டம் மோகன்குமார், பொள்ளாச்சி

மோகன்குமாரின் சகோதரர் பாலசுப்பிரமணி யம் கூறுகையில், பொள்ளாச்சியில் எனது சகோ தரருக்கு விபத்து ஏற்பட்டது. அதனைத்தொ டர்ந்து கோவைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு கங்கா மருத்துவமனையில் உடனடியாக முதலமைச்சரின் இன்னுயிர் காப் போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. விபத்து நடந்தவுடன் (golden hours)  எனது சகோதரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட தன் பயனாக தற்போது என்னுடைய சகோதரர் மிகவும் நலமாக உள்ளார். இன்னுயிர் திட்டம் தந்து எனது சகோதரரின் உயர்மீட்க உதவிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.

6.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
சந்திரலேகா, விளாங்குறிச்சி

நான் விளாங்குறிச்சி பகுதியில் ஒரு நிறுவ னத்தை நடத்தி வருகிறேன். நான் இதற்கு முன்ன தாக தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தேன்.  சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என் னுடைய கனவாக இருந்தது. ஆனால் அதற்கு  தேவையான பொருளாதார வசதி என்னிடம் இல்லை. இந்நிலையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், சுய தொழில் செய்ய மானியம் வழங்குவதை அறிந்து என்னுடைய நிறுவனத்திற்கான திட்ட  மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்து  மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித் திருந்தேன். என்னுடைய நிறுவனத்தின் திட்ட மதிப்பீடு ரூ.2.42 கோடியாகும். இத்திட்டத்தின் கீழ் அரசு மானியமாக ரூ.62.37 லட்சம் வழங்கப் பட்டது. தற்போது, என்னுடைய நிறுவனத்தில் ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரித்து  கூடுதலாக வருமானம் பெறுவதுடன், எங்களு டைய பொருளாதார நிலையும் உயர்ந்துள்ளது. என்னுடைய நிறுவனத்தின் மூலம் 20 பணியா ளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். இதற்கு காரண மான முதல்வருக்கு நன்றிகள் பல!