செங்கல்பட்டு,பிப்.19- மனித உடலில் நரம்பு இயக்கத் தில் ஏற்படும் சீர்குலைவுகள் காரண மாக நடுக்கம் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உருவாகிறது. இது குறித்த தொடர் மருத்துவக் கல்வி திட்டத்தில் எஸ்ஆர்எம் சேர்க்கப்படவுள்ளது. அத்துடன், ஆராய்ச்சிகளிலும் ஈடுபடவுள்ளது. இந்தப் பணியில், உலகின் முன்னணி நிறுவனமான லண்டன் கிங்ஸ் கல்லூரியுடன் எஸ்ஆர்எம் இணைந்து ஈடுபடவுள்ளன. இந்தி யாவிற்கான நடுக்கம் நோய் ஆராய்ச்சி கூட்டமைப்பு மூலமாக இந்த பணிகள் நடக்க உள்ளன. இதற்கான நிபுணர்கள் சந்திப்பு நிகழ்வு காட்டாங்குளத்தூரில் நடை பெற்றது. இதில், லண்டன் கிங்ஸ் கல்லூரி நரம்பியல் மருத்துவ பேரா சிரியரும் நரம்பு இயக்க சீர்குலை வுகள் நிபுணருமான பேரா. கே.ரேச வுத்ரி, எஸ்ஆர்எம் பேரசிரிய ரும் நரம்பியல் மருத்துவ ஆலோச கருமான வினோத்மேத்தா, ஹைத ராபாத் நிஷாம் நரம்பியல் நிறுவன இயக்குநர் ரூபம்பார் கோஹைன், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணை துணை வேந்தர் மரு. ஏ. ரவிக்குமார், கல்லூரி தலை வர் மரு. ஏ. சுந்தரம், மருத்துவ ஆராய்ச்சி தலைவர் ராஜிவ் ஜனார்த னன் மற்றும் மருத்துவ கல்வி பிரதி நிதிகள் உட்பட 300க்கும் மேற்பட் டவர்கள் பங்கேற்றனர். நரம்பு இயக்கத்தில் ஏற்படும் சீர் குலைவுகள் கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் காண் பதற்கான ஆராய்ச்சியில் லண்டன் கிங்ஸ் கல்லூரியும், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியும் இணைந்து மேற்கொள்ளவது என்று முடிவு செய்துள்ளன.