சேலம், ஆக.13- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், சேலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆடி பெருக்கு விடுமுறையையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டம், சாமி நாதபுரம் கிளை சார்பில், 16 ஆவது ஆண்டாக விளை யாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டி கள் மற்றும் சிறுவர்கள், இளையோர் மற்றும் பெண் களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா வில், 2023 -24 ஆம் ஆண்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சாமிநாதபுரம் பகுதி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டன. யுவபுரஸ்காரர் தேசிய விருது பெற்ற கின்னஸ் சாதனை யாளர் கரகம் துர்கா மாலினியின், பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, இவ்விழாவை, மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் வாலிபர் சங்க மாநகரத் தலைவர் கே.ராமச்சந்திரன், செயலாளர் ஆர்.குருபிரசன்னா, துணைச்செயலாளர் எம்.ஜீவா, மாதர் சங்க மாநகரச் செயலாளர் ரம்யா, விழாக்குழு தலைவர் பி.சதீஷ்குமார், செயலாளர் கே.ரேவதி, பொரு ளாளர் பி.ராஜேஷ்குமார் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.