நாமக்கல், ஜன. 7- எலச்சிபாளையம். மல்லசமுத்திரம் ஒன்றி யத்தில் திருமணிமுத்தாறு திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பிரச்சா ரம் நடைபெற்றது. மேட்டூர் அணையில் இருந்து வெளியே றும் காவிரி நீர் செத்தமலை வழியாக கால் வாய் அமைத்து சேலம், நாமக்கல் மாவட் டம் முழுவதும் உள்ள திருமணிமுத்தாற்றில், காவிரி உபரி நீர் இணைப்பதன் மூலம், பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகளுக்கு விளைச்ச லும், விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகிறது. மக்கள் நலன் சார்ந்த, இக்கோரிக்கைகள் ஏற்கப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி் சார்பில் வாகன பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் கட்சியின் எலச்சிபாளையம் மேற்கு ஒன் றியச் செயலாளர்.கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார், கிழக்கு ஒன்றியச் செய லாளர் தேவராஜ் மாவட்டக் குழு உறுப்பி னர் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ. கந்த சாமி. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.வேலுசாமி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகளுடன் வாகனங்களில் பிரச் சாரம் செய்து கோரிக்கைகளை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. முன்னதாக எலச்சிபாளையம் சந்தைப்பேட்டை, சத்யா நகர், ராமாபுரம், கருங்கல்பட்டி, பருத் திப்பள்ளி ,சோமனம்பட்டி, சக்கரப்பட்டி, வையப்பமலை,. பெரிய மணலி. கோக்கலை கொத்தம்பாளையம் வழியாக எலச்சிபாளை யத்தில் பிரச்சார இயக்கம் நிறைவு பெற்றது.