கோவை, ஜூலை 28- ஸ்பீட் ரேடார் பொருந்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணை யர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை மாநகரில் ஸ்பீட் ரேடார் பொருந் திய கேமராக்கள் பயன்பாட்டை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் வெள் ளியன்று துவக்கி வைத்தார். இந்த கேம ராக்கள் கோவை - அவிநாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அப ராதம் விதிக்கப்படும். அபராத விதிப்பு உரிய ஆவணங்களுடன் வாகன உரிமையாள ருக்கு இ- செலான் மூலம் அனுப்பி வைக்கப் படும். இதுகுறித்து காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் கூறுகையில், மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துக் களை தடுப்பதற்காகவும் மாநகர காவல் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக, கோவை மாநகரில் உள்ள அவிநாசி சாலை, சத்திய மங்கலம் சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று முக்கியமான சாலைகளில் 3D ஸ்பீட் ரேடார் பொருந்திய கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை வேகத்தை நாம் கண்டறியலாம். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு செய்ய முடியும். 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல் லும் வாகனங்களுக்கு உடனடியாக அபரா தம் விதித்து இ - செலான் அனுப்பப்படும். கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக் குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாக னங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் போக்கு வரத்து துணை ஆணையர் மதிவாணன் உட் பட மாநகர காவல் துறையினர் கலந்து கொண் டனர்.