districts

img

கோபியில் சிறப்பு குறைதீர் முகாம்

கோபி, ஜன.3- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருந்தலையூரில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்  நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பூபதி தலைமை யில் நடைபெற்ற முகாமில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்றார். பட்டா வேண்டியும், பட்டா மாறுதல் செய்யக் கோரியும், பெயர் மாற்றம் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள்  மனுக்களாக வழங்கினர். மனுக்களை பெற்ற சட்டமன்ற  உறுப்பினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.