உடுமலை, நவ.20 - உடுமலை 10ஆவது புத்தகத் திருவிழா குறித்து மாணவர்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 23ஆம் தேதி தேஜஸ் மஹாலில் (நகராட்சி மண்டபம்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாண வியருக்கு சிறப்பு போட்டிகள் நடை பெற உள்ளன. உடுமலை புத்தகாலயம் – திருப் பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 10 நாட்கள் உடுமலை தேஜஸ் மஹாலில் புத்தகத் திருவிழா நடைபெற உள் ளது. இந்த புத்தக திருவிழாவில் முன்னணி புத்தகப் பதிப்பகங்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் தின மும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளன. இந்த புத்தக திருவிழாவில் மாணவ, மாணவியர் களை கலந்து கொள்ளச் செய்யும் வகையில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகி றன. இதன் ஒரு பகுதியாக வரும் சனிக் கிழமை காலை 10 மணி முதல் 11.30 வரை 1 முதல் 3ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்களுக்கு, நீ விரும்பும் ஓவியம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகள் நடைபெறுகி றது. மேலும், 4 மற்றும் 5 ஆம் வகுப் பிற்கு நீ விரும்பும் பறவை அல்லது பூ, 6 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு விலங்கு அல்லது இயற்கைக் காட்சி கள், 9, 10ஆம் வகுப்பிற்கு நீ விரும்பும் தலைவர்கள் அல்லது படைப்பாளி கள், 11, 12ஆம் வகுப்பிற்கு சமூக விழிப்புணர்வு ஓவியங்கள், கல்லூரி யில் படிக்கும் மாணவ மாணவியர்க ளுக்கு இலக்கிய காட்சி குறித்த ஓவி யங்கள் தலைப்பாக வழங்கப்பட்டுள் ளன. மேலும், காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் கட் டுரை போட்டிகளில் 6 முதல் 8ஆம் வகுப்புக்கு எனது உடுமலை என்ற தலைப்பிலும், 9, 10ஆம் வகுப்பிற்கு பெண்ணின் பெருமை என்ற தலைப்பி லும், 11, 12ஆம் வகுப்பிற்கு வாசிப் பின் அவசியம் குறித்தும், கல்லூரி யில் படிக்கும் மாணவ, மாணவியர் களுக்கு சுயக் கட்டுப்பாடும், சமூக மேம்பாடும் என்ற தலைப்பில் கட் டுரை போட்டிகள் நடைபெற உள் ளன. அதேபோல் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் 6 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு நட்பு எனும் நந்தவனம், 9, 10ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு அலை பேசி சமுதாயத்தின் வளர்ச்சி? வீழ்ச்சி? என்ற தலைப்பு, 11, 12 ஆம் வகுப்பிற்கு இன்றைய வாழ்க் கைக்கு வள்ளுவம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஓர் அழி வுப்பாதை ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள் ளன. இப்போட்டிகளில் ஒரு மாணவர் இரண்டு போட்டிகளில் கலந்து கொள் ளலாம். கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் நான்கு பக்கத் திற்கு மிகாமல் எழுத வேண்டும். பேச்சுப் போட்டிகளில் ஐந்து நிமிடங் கள் வரை பேச வேண்டும். மேலும் கட் டுரை மற்றும் ஓவிய போட்டிகளுக்கு தேவையான பொருட்களை மாண வர்களே கொண்டு வர வேண்டும் என்று வரவேற்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் காலை 9 மணிக்கு போட்டி நடக்கும் மண்டபத்திற்கு வர வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு சான்றிதழ் புத்தக திருவிழா வில் நடைபெறும் சிறப்பு கலை நிகழ்ச்சி மேடையில் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.