ஈரோடு, ஜன. 11- பொங்கலை முன்னிட்டு, கோவை மற்றும் ஈரோட்டில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக் கப்பட உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல் வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீதிமன் றத்தின் தலையீட்டால் வேலைநி றுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், பொங்கலுக்கு சிறப்பு பேருந்து களை இயக்குவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறி வித்துள்ளது. இதுகுறித்து கோவை கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு மண் டலப் பொது மேலாளர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், பொங் கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலத்தின் சார்பில் ஜன.12ஆம் தேதி முதல் ஜன.18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஈரோடு பேருந்து நிலையத்தி லிருந்து கோவை, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இரா மேஸ்வரம், நாகர்கோவில், திரு நெல்வேலி, திருச்சி, உள்ளிட்ட ஊர்களுக்கு 300 புறப்பாடுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. மேலும் பயணிக ளின் அடர்வு அதிகரிக்கும் பட்சத் தில் அதற்கு ஏற்றவாறு பேருந்து களின் எண்ணிக்கையை அதிகரிக் கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்துள்ளார். கோவை இதேபோன்று, கோவையில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டு வருகிறது. அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத் தில் இருந்து மதுரை, தேனி, மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்ப டும். சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப் படும். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங் கலம் மார்க்கமாக செல்லும் பேருந் துகள் இயக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.