districts

img

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு பேரவை

திருப்பூர், ஜன.29- 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங் கம் சார்பில் சனியன்று திருப் பூரில் சிறப்பு பேரவை நடை பெற்றது. வரும் பிப்.6 ஆம் தேதி ஓய்வு பெற்றோருக்கான டிஏ  உயர்வு வழங்குவது குறித் தான வழக்கு உச்ச நீதிமன்றத் தில் விசாரணைக்கு வர உள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி 7 ஆம் தேதி  பேச்சுவார்த்தை நடைபெறும் என அரசு தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  திருப்பூரில் 6 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு அரசுப் போக்குவரத்து கோவை, ஈரோடு, திருப்பூர் எஸ்இடிசி சங்கங் கள் மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்புகள் சார்பில் திருப்பூரில் சனியன்று சிறப்பு பேரவை நடைபெற்றது. இதில், சிஐடியு அர சுப் போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டலச் செயலாளர் பி.செல்லத்துரை தலைமை வகித்தார். எஸ்இடிசி பொதுச் செய லாளர் எம்.கனகராஜ், ஈரோடு மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி,  சம்மேளன பன்முக தலைவர் என்.முரு கையா, சம்மேளன நிர்வாகி எம்.வேளாங்கன் னிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர். முடிவில்  கோவை மண்டலச் செயலாளர் எம்.பரமசி வம் நன்றி கூறினார்.