திருப்பூர், ஆக.24- தேசிய விண்வெளி தினத்தை முன் னிட்டு திருப்பூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விண் வெளி பற்றிய பயிற்சிப் பட்டறை சனி யன்று நடைபெற்றது. 2023 ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திர யான் 3 மிஷன் விக்ரம் லேண்டரை நில வின் மேற்பரப்பில் பாதுகாப்பாகவும், மென்மையாகவும் இஸ்ரோ தரையிறக் கியது. இதன் மூலம், நிலவில் தரையிறங் கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரை யிறங்கிய முதல் நாடு என்ற பெரு மையை இந்தியா பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அறிவிக் கப்பட்டது. அதன்படி முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு திருப் பூரில் சனியன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான விண்வெளி பற்றிய பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய விண்வெளி துறையின் சாதனைகள் குறித்தும், சந்தி ரயான் 3 விண்கலம் செய்த சாதனைகள் குறித்தும் வானியல் கருத்தாளர் கார்த்திக் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், தொலை நோக்கியின் மூலம் சூரியனில் உள்ள கரும்புள்ளிகளை (பிளாக்ஸ்பாட்) கண் டனர். இதைதொடர்ந்து, தொலைநோக் கியின் பயன்பாடு குறித்தும், நியூட்ட னின் மூன்றாவது விதியை பயன்ப டுத்தி ராக்கெட் எவ்வாறு செல்கிறது என் பதை செயல் விளக்கத்துடன் ராக்கெட் மாதிரிகளை மாணவர்கள் உருவாக்கி னர். இந்நிகழ்வை திருப்பூர் மாவட்ட அறி வியல் இயக்கச் செயலாளர் கெளரி சங்கர் முன்னிலையில், அஜீத்குமார் ஒருங்கிணைத்தார். இதில், அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 30 க்கும் மேற்பட்ட மாணவர் கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற னர்.