ஈரோடு, டிச.15- வெறுப்பரசியலை வேரறுப் போம், அன்பே அறம் என்கிற முழக் கத்தோடு சென்னையில் துவங்கிய கலைப்பயணத்திற்கு ஈரோட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட் டது. சமூக நீதி, தமிழ் விழுமியங்கள், மாநில உரிமை, சாதி, மத, பாலின வேறுபாடின்மை, வெறுப் புப் பேச்சு எதிர்ப்பு ஆகிய கருத்தாக் கங்களை முன்நிறுத்தி “அன்பில தனை அறம்” எனும் கலைப்பய ணம் கடந்த டிச.13 ஆம் தேதி முதல் 17 வரை தமிழ்நாட்டில் பயணம் செய் கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம், திராவிடர் கழகம், திராவி டர் விடுதலைக் கழகம், தந்தை பெரி யார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒருங்கி ணைப்பில், இப்பயணம் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை, தூத் துக்குடி, நெல்லை, நாகர்கோ வில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிக ளில் அன்பையும், அறத்தையும் உயர்த்திப் பிடிக்கும் பயணமாகத் தொடர்கிறது. 35 கலைஞர்கள், எழுத்தா ளர்கள், அறிவுத்துறையினர் உள் ளிட்ட செயற்பாட்டாளர்கள் அடங் கிய பயணக்குழு வியாழனன்று ஈரோடு வந்தது. தந்தை பெரியார் நினைவகத்தில் பறை இசையுடன் இப்பயணம் தொடங்கியது. தமுஎ கச மாவட்டத் தலைவர் மு.சங்க ரன் வரவேற்றார். பயணத்தின் நோக்கம் குறித்து தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா உரையாற்றினார்.
ஈரோடு கடைவீதியிலுள்ள கிருஷ்ணா திரையரங்கு அருகில் அடுத்த நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீ சன் தலைமை வகித்து, வாழ்த்துரை யாற்றினார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலை வர் வரதராஜன் தொடக்கவுரை யாற்றினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, பயணத்தின் முக்கி யத்துவம் குறித்து விளக்கவுரை ஆற்றினார். அதையடுத்து கலை ஞர்களின் இசைப்பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூரம்பட்டி நாற்சாலை அருகில் நடந்த மூன்றாம் நிகழ்வில் திராவி டர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் த.சண்முகம் வாழ்த் துரை வழங்கினார். தொடர்ந்து “வள்ளலார்” நாடகம் நடைபெற் றது. இதில் மதவெறி, சடங்குகள் ஆகியவற்றை மறுத்த அருட்பிர காச வள்ளலாரின் சுத்த சமரச சன் மார்க்கக் கருத்துக்கள் விளக்கப்பட் டது. தொடர்ந்து பொதுவுடை மைப் போராளி கே.பி.ஜானகி அம் மாளின் பன்முக ஆளுமையை விளக்கும் “அம்மா” எனும் நாடகம் இடம்பெற்றது. இசைப்பாடலும், கூட்டு நடனமுமாக இந்நாடகம் பார்வையாளர்களை ஈர்த்தது. இறுதியாகக் கவிஞர்.சுகிர்தராணி கவிதையுடன் உரையாற்றினார். பயணக்குழுவினரின் பாட்டும், கூத்தும், கவிதையும், பொழிவும் அனைவரையும் கவர்ந்தது. இக்குழுவில் தமுஎகச மாநில துணைத்தலைவரும், திரைக்கலை ஞருமான ரோகிணி, நாடகவியலா ளர் பிரனயன், பேராசிரியர் மங்கை, கவிஞர் சுகிர்தராணி, ஊடகவிய லாளர் கவின்மலர் தலைமையி லான கலைக்குழுவினர் இடம்பெற் றிருந்தனர். பல்வேறு முற்போக்கு இயக்கத்தை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர்.