districts

img

டிஆர்இயு பிரச்சாரம்

சேலம், நவ.7- தென்னக ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர் தல் நடைபெறுவதையொட்டி, சேலம் மாவட்டம் மேட்டூ ரில், டிஆர்இயு-வினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடு பட்டனர். தென்னக ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத் திற்கான தேர்தல் 2024 டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெரும் முனைப்போடு, சிஐடியு-டிஆர்இயு-வினர் வாக்கு சேக ரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக மேட்டூர் ரயில் நிலையம், ரயில்வே தொழி லாளர் குடியிருப்பு, மேட்டூர் அனல் மின் நிலைய ரயில்வே  தொழிலாளர்களை அலுவலர்களை, டிஆர்இயு அமைப் பினர் வியாழனன்று நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் டிஆர்இயு நிர்வாகிகள் குமரேசன் மற்றும் மேட்டூர் சிஐடியு நிர்வாகிகள் சி.கருப்பண்ணன், வி.இளங்கோ, ஆர்.கோவிந்தராஜ், கே.சண்முகம், எஸ். செல்வகணபதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.