districts

img

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம்: சிபிஎம் கடும் எதிர்ப்பு

திருப்பூர், டிச.18- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  திருப்பூரில் பல்வேறு பகுதிகள் திங்களன்று  மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு ஒன்றியம்: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர்  தெற்கு ஒன்றிய குழுவின் சார்பில் பழவஞ்சி பாளையம், மணிகாரம்பாளையம், பெரி யாண்டிபாளையம், மங்கலம், முருகம்பா ளையம், சிட்கோ, ஹசிங்யூனிட், வீரபாண்டி,  கல்லாங்காடு என 9 மையங்களில் மனு அளிக் கும் இயக்கம் நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் 1100 படிவங்களில் கையெழுத்து பெற்று சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகா ரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச்  செயலாளர்கள் உட்பட திரளான பொது மக்கள் பங்கேற்றனர். வேலம்பாளையம்: ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை  நடை முறைப்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்துக்குப் தமிழக அரசு  பணிய கூடாது என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 15.வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் கடந்த 4 நாட்களாக  வேலம்பாளையம் நகரப் பகுதியில் பொது மக்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் களிடமும்  ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனுவில் கையெழுத்துப் பெறப்பட் டது. இந்நிலையில், திங்களன்று அனுப்பர் பாளையம் உதவி செயற்பொறியாளர் அலு வலகத்தில் மக்களிடம் பெறப்பட்ட 350 மனுக் களை  உதவிப் பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி யிடம் அளிக்கப்பட்டது. முன்னதாக, மனுக்கொடுக்கும் இயக்கம்  குறித்து நடந்த விளக்கக் கூட்டத்திற்கு நகரக்  குழு உறுப்பினர் அ.ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் கோபி  குமார், சிபிஎம் நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், நகரக் குழு உறுப்பினர் அ.உமாநாத் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரக் குழு உறுப் பினர்கள் ஆர்.சுகுமார், ர.கவிதா, பி.நவபா லன், பி.ரகுபதி, பி.சின்னச்சாமி உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் திரளா கக் கலந்து கொண்டனர். காங்கேயம்: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் புதிய மின் சார திட்டத்தை ரத்து செய்ய கோரி திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  காங்கேயம் தாலுக்கா செயலாளர்

திருவேங் கடம்சாமி தலைமையில் மின்வாரிய  அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதே போல நால்ரோடு, செம்மண்குழிப்பா ளையம், நல்லிகவுண்டன்வலசு கிளைகள் சார்பில் தாலுக்கா குழு உறுப்பினர் வேலுச் சாமி தலைமையில் உதவி மின்பொறியாள ரிடம் மனு அளிக்கப்பட்டது.  அவிநாசி: அவிநாசியில் நான்கு இடங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக் குழு சார்பில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மனு கொடுக்கும் இயக் கம் நடைபெற்றது. வஞ்சிபாளையம் பகுதியில் மோகன சுந்தரம் தலைமையில் 130 கையெழுத்து பெற்ற படிவங்கள், வடுகபாளையம்  மாவட் டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றிய குழு  கருப்புசாமி தலைமையில் 151 கையெழுத்து பெற்ற படிவங்கள், திருமுருகன்பூண்டி ஒன் றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், நகர் மன்ற உறுப்பினர்கள் தேவராஜன், சுப்பிரமணி யம் உள்ளிட்டோர் தலைமையில் 250 கையெ ழுத்து பெற்ற படிவங்கள், அவிநாசி மங்கலம்  சாலை பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பினர்  சண்முகம், ராஜன், பழனிசாமி, முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன் உள்ளிட் டோர் தலைமையில்  600 கையெழுத்து பெற்ற  படிவங்கள் என  மொத்தமாக 1200 மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதில் கிளைச் செயலாளர், மாதர் சங்கம், வாலி பர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.