மேட்டுப்பாளையம், ஏப்.26- மேட்டுப்பாளையத்தை அடுத் துள்ள சிறுமுகை வனச்சரக பகுதி யில் குட்டி ஈனும் போது ஏற்பட்ட சிக்கலில் தாய் மற்றும் குட்டி என இரு யானைகள் பரிதாபமாக உயி ரிழந்துள்ளது. கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக் குட்டை காப்புக்காட்டு பகுதி, பவானிசாகர் அணையின் நீர்தேக் கத்தை ஒட்டி அமைந்துள்ளது. எப்போதும் தண்ணீர் தேங்கி இருக்கும் இடம் என்பதால் கோடை காலங்களில் தாகம் தீர்க்க கூட் டம் கூட்டமாக யானைகள் இப்பகு திக்கு வருவது வழக்கம். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமி ருக்கும் இவ்வனப்பகுதியை வனத் துறையினர் பல குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்ற னர். இந்நிலையில், திங்களன்று மாலை நீர்தேக்கத்தின் அருகே வனத்துறையினர் ரோந்து பணி யில் இருந்தபோது, ஒரு இளம் வயது பெண் யானை குட்டி ஈனும் போது ஏற்பட்ட பிரச்சனையால், சிசுவாக வெளி வந்த குட்டியுடன் யானை இறந்து கிடப்பது கண்டறி யப்பட்டது.
இதுகுறித்து உயர் அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, இரவு நேரத்தில் பிற யானை களின் நடமாட்டம் இருக்கும் என்ப தால், செவ்வாயன்று காலை கால் நடை மருத்துவர்கள் அடங்கிய வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி னர். இதன் முதற்கட்ட ஆய்வில், தனது முழு பிரசவ காலத்திற்கு முன்னதாகவே பிரசவம் ஆன தால் தாய் யானையும், அதன் குட்டி யும் இறந்திருப்பது தெரியவந்தது. ஆசிய பெண் யானைகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட் டுமே கருத்தரித்து குட்டி போடும். இதன் கர்ப்ப காலம் 22 மாதங்களா கும். பெரும்பாலும் காட்டு யானை களுக்கு குட்டி ஈனுவதில் பிரச்ச னைகள் உருவாகாது. இயற்கை யான முறையில் ஒரு குட்டியி னையோ அல்லது மிக அரிதாக இரட்டை குட்டிகளையோ பிரச விக்கும். இந்த யானைக்கு ஏற்பட்ட உடல் நல கோளாறு அல்லது உடலில் சத்து மற்றும் நீர் குறைபாடு கார ணமாக குட்டியினை குறை மாசத் தில் பிரசவித்து இறந்துள்ளது. ஆனாலும், யானையின் இறப்பு குறித்த மருத்துவ காரணங்கள் முழுமையான உடற்கூறு ஆய் விற்கு பின்னரே தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ள னர். இச்சம்பவம் வனத்துறையி னரை மட்டுமின்றி, இப்பகுதி கிராம மக்களையும் கவலையில் ஆழ்த்தி யுள்ளது.