திருப்பூர், நவ. 27 – சிறு, குறு தொழில் துறை சந்திக்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்சனைக ளுக்கும் ஒன்றிணைந்து போராட வேண் டும் என்ற கருத்தை தொழில் துறையினர் முன்வைத்துள்ளனர். தமிழ்நாடு தொழில்துறை மின்நு கர்வோர் கூட்டமைப்பினர் திங்களன்று திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங் கில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி னர். இதில் மின்சார நிலைக் கட்டண உயர்வை விலக்கிக் கொள்ள வேண் டும், உச்சநேர பயன்பாட்டுக் கட்ட ணத்தை ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தி னாலும் அமல்படுத்தக் கூடாது, சூரிய ஒளி மின் தகடு பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என்று தீர் மானித்தனர். மின் கட்டணப் பிரச்சனையில் ஏற்பட் டிருக்கும் இந்த ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் வலிமைப்ப டுத்த வேண்டும் என இந்த கூட்டத்தில் பேசியோர் கருத்துரைத்தனர். மேலும் சிறு, குறு தொழில் துறை மின் கட்டண உயர்வு மட்டுமின்றி, பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஜிஎஸ்டி, இ வே பில் உள்பட இன்னும் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. எனவே இந்த ஒற்றுமையுடன் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைப் பாதுகாக்க வும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கூறினர்.
தற்போது தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி சில அறிவிப்புகளைச் செய்திருந்தாலும் நிலைக்கட்டண உயர்வு பெரும் பிரச்சனையாகும். அதை விலக்கிக் கொள்ள வேண்டும். அரசு நேரடியாக எங்களுடன் பேசி தீர்வு காண்பது தொழில் துறையைப் பாதுகாக்க உதவும், இது தமிழ்நாட் டுக்கு முக்கியம். அரசு அதிகாரிகள் சொல்வதை கேட்பதை விட எங்களிடம் நேரில் பேசினால் தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் கூறினர். தமிழ்நாடு அரசு மின் கட்டணங் களை உயர்த்தி இருப்பது உதய் மின் திட்டத்தின் அடிப் படையில் செய்திருக்கிறதா என்ற கேள்விக்கு, உதய் மின் திட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் உள்பட இன்னும் பல தொந்த ரவுகளை நாம் எல்லோரும் சந்திக்கப் போகிறோம். அது தமிழ்நாட்டுக்குத் தலைவ லிதான். ஆனால் இப்போது உயர்த்தி இருப்பது மாநில அரசுதான். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத் திய பேச்சுவார்த்தையில் சில மாற்றங் கள் செய்வதாக மாநில அரசு ஒப்புக் கொண்டிருக்கிறதே, எனவே இது மாநில அரசின் பிரச்சனைதான் என்று தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார். அதேசமயம் இக்கூட்டத்தில் உரை யாற்றிய பலரும் மின்சார கட்டணப் பிரச் சனையில் மட்டுமின்றி சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதற்கான கூட்டமைப்பாக இது செயல்பட வேண் டும். இதுவே தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து வித சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரின் எதிர் பார்ப்பாக உள்ளது என்று கூறினர்.