districts

img

தொழில் அமைதியை சீர்குலைக்காதே போக்குவரத்து தொழிலாளர்கள் முழக்கம்

கோவை, பிப்.4- கோவை போக்குவரத்து கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை யில் ஒத்துக்கொண்டதை ஏற்க மறுத்து, தொழில் அமை தியை சீர்குலைப்பதை கண்டித்து சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தின் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் விரோத போக்கு, பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் போன்ற சீர்குலைவு நடவடிக்கைகளை கண்டித்தும், தொழில் அமைதியை குலைக்கும் குறிப்பாணைகள் வழங்கி யதை ரத்து செய்ய வேண்டும்  என வலியுறுத்தியும், கோவை  மேட்டுபாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து  தலைமையகம் முன்பு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோவை மண்டல தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், மண்டல பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ்,  திருப்பூர் மண்டல பொதுச்செயலாளர் செல்லதுரை, ஈரோடு மண்டல பொதுச்செயலாளர் ஜான் கென்னடி, சம்மேளன நிர்வாகி கள் கனகராஜ்,  முருகைய்யா, திருப்பூர் மண்டல பொரு ளாளர்  சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.