கோவை, ஜூன் 26- கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர் ந்துள்ளது. மேலும், தொடர் மழை யால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கோவை குற்றாலம், கவியருவி ஆகிய சுற்றுலாத்த லங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு மற் றும் கேரளாவின் எல்லை பகுதியில் சிறுவாணி அணை அமைந்து உள் ளது. இந்த அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங் குகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு, மூன்று தினங்களாக அப்ப குதியில் கனமழை பெய்து வரு கிறது. செவ்வாயன்று வழக்கத்தை விட கூடுதலாக 120 மி.மீ மழை பொழிந்து உள்ளது. தற்போதைய அணையின் நிலவரம் 14.53 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பெய்த மழை பொழிவின் காரணமாக, திங்களன்று 11.32 அடி யாக இருந்த நிலையில், செவ்வா யன்று 14.53 அடியாக உயர்ந்துள் ளது. இனி வரும் நாட்களிலும், தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதனால், அணையின் நீர் மட்டம் மளமளவென உயரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணை உயரும் பட்சத்தில் பொதுமக்க ளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றத்தை குடிநீருக்காக எடுத்து வருகின்ற னர். தற்போது அணையின் நீர்மட் டம் உயர்ந்து இருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. கோவை குற்றாலம் மூடல் கோவை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை இந்த மாதம் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், செவ்வாயன்று பெய்த கனமழையால பூண்டி, வெள்ளி யங்கிரி, கோவை குற்றாலம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டது. இதன் காரண மாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்ப தற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலி கமாக கோவை குற்றாலம் மூடப்படு வதாக வனத் துறையினர் தெரிவித் துள்ளனர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பிய வுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் எனவும் வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும், கோவையில் பெய்த கனமழையின் காரணமாகவும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம் குட்டைகள் ஆகியவை நிரம்பி வருகின்றது. சித்திரைசாவடி அணையில் வெள்ளப்பெருக்கு கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை யால் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் அடிவாரப் பகுதியில் நீர்வ ரத்து அதிகரித்து நொய்யல் ஆற் றில் நீர்வரத்து அதிகரித்து முதல் தடுப்பணையான சித்திரைசாவடி அணையில் தற்போது வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் இரு கரை தொட்டவாறு நீர் செல்வதால் நிலத்தடி நீர் உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கவியருவி செல்லத் தடை கடந்த இரண்டு நாட்களாக ஆனைமலை புலிகள் காப்ப கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. திங்களன்று மாலை முதல் வால்பாறை தலை நகர் எஸ்டேட் சண்முகா எஸ்டேட் அட்டகட்டி போன்ற பகுதிகளில் அதிக அளவில் கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு வேலிகள் அனைத்தும் உடைந்தது. இதனையடுத்து, சுற்றுலாப் பயணி நலன் கருதி கவி அருவிக்கு செல்ல தற்போது வனத்துறையினர் தடை விதித்துள் ளனர். நீர்வரத்து குறைந்த உடன் தடுப்பு தடுப்பு சீரமைக்கப் பட்டவுடன் சுற்றுலாப் பயணிக ளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ள னர்.