கோவை மாவட்டத்தின் அடை யாளங்களில் ஒன்றாக சிங்காநல்லூர் பகுதி விளங்குகிறது. தமிழகத்தின் முத்திரை பதித்த முதல்வர்களாக இருந்த கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வளர்ச் சிக்கு (திரைத்துரையில்) வாழ்வழித்த இடம் சிங்காநல்லூர் என்றால் அது மிகையல்ல. இன்றும் தொழில்துறையில், கல்வித்துறை யில், மருத்துவத்துறையில் முக்கிய பங் காற்றி வருகிற பெருமை வாய்ந்த பகுதியாக சிங்காநல்லூர் உள்ளது. கலகலப்பான ரயில் நிலையம் கோவை மாநகரின் வளர்ச்சியில் சிங்காநல் லூர் பெரும் பங்காற்றி வருகிறது. கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு சுமார் 3.50 லட்சம் வாக்காளர்கள் உள்ள னர். பொதுவாகவே கோவை மாவட்ட மக் கள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களோடு நெருங் கிய தொழில் உறவு கொண்டுள்ளனர். இதே போல, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மக்கள் கோவை மாவட்டத்தோடு தொழில் உறவு கொண்டுள்ளனர். இந்தியா விலேயே அதிக வருவாயை ஒன்றிய அர சுக்கு அளிக்கும் மாநிலம் தமிழகம் என் றால், அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கோவை மாவட்டம் செய்து வருகிறது. இவ் வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோவை மாவட்டத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ் சகம் செய்து வருகிறது. அதுவும் குறிப்பாக ரயில்வேத்துறையில் கோவை மாவட்ட மக்க ளின் தொடர் கோரிக்கைகளை ஒன்றிய அர சும், ரயில்வே நிர்வாகமும் தொடர்ந்து புறக் கணித்தே வருகிறது. அந்த வகை யில் வருவாயை அள்ளிக்கொடுத்த, ஆயிரக் கணக்கான மக்கள் ஏறி, இறங்கி கலகலப்பாக இருந்த சிங்காநல்லூர் ரயில் நிலையம் இன்று புதர் மண்டி, சமூக விரோதிகளும், விஷ ஜந்துக்களும் குடி கொண்ட இடமாக மாறியுள்ளது. சிங்காநல்லூர் ரயில் நிலைய துவக்கத்திற்காக இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களை வழங்கினர் சுமார் 150 ஏக்கர் வரை ரயில் நிலையம் வசம் உள்ளது. பொது பயன்பாடுக்காக வழங்கிய நிலங்கள் தற்போது பயன் இல்லாமல் இருப்பது நிலம் வழங்கிய மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி., பி.ஆர்.நடராஜன் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன் னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்தில் நாடு முழுவதும் சேவை நோக்கத்துடன் இயங்கி வந்த பாசஞ்சர் ரயில் களை ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியது. கொரோ னாவுக்கு பின்னர் லாப நோக்கத்தை முதன் மையாக கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி நாடு முழுவதும் ரயில் நிறுத்தங்களின் எண்ணிக்கையையும் ஒன்றிய அரசு குறைத்து விட்டது. அச்சமயத்தில் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு வந்த ரயில் களை, அதன் பின்னர் நிறுத்துவதில்லை. விரைவு ரயிலுக்குரிய கட்டணத்தை கொடுப் பதற்கு பயணிகள் தயாராக இருந்தும். ரயில்வே நிர்வாகம் மீண்டும் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துவ தில்லை. மீண்டும் ரயில்களை நிறுத்துவதோடு கூடுதல் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும் என மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு இயக்கங்களை நடத்தியது. ரயில் நிலையத்தின் மேம்பாட்டுக்காக ரயில்வே அமைச்சர் மற்றும் உயர் அதிகாரி களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. அதோடு நாடு முழுவ தும் பாசஞ்சர் ரயில்கள் இயக்குவது சம்பந்த மாக நாடாளுமன்றத்தில் 377 நோட்டீஸ் அளித்தும் பேசியுள்ளேன். சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் தற்போது 12 பெட்டி களை கொண்ட ரயில்கள் நிற்பதற்கான பிளாட்பார்ம் தான் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்துவதற்காக நடை மேடைகளின் நீளத்தை விரிவுபடுத்த வேண் டும். மேலும் கோவை - மேட்டுப்பாளையம் மெமோ ரயில் இயக்கப்படுவது போல கோவை - திருப்பூர் நகரங்களுக்கும் மெமோ ரயில் இயக்கப்பட வேண்டும். இதுவே தீர் வாக அமையும், என்றார். விபத்துகள் குறையும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தில் கிட்டதட்ட 4 லட்சம் மக்களுக்கு பயன் பட வேண்டிய இருகூர் மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு ரயில் நின்று சென்றால் தினமும் 1000 க்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள். இதனால் பொது போக்குவரத்து அதிகரிக்கும். தனி நபர் வாகன பயன்பாடு குறைந்து வாகன விபத்துகளும் குறையும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்க நல்லூர் நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி கூறு கையில், அனைத்து ரயில்களும் சிங்கநல் லூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றால், நக ரின் மையத்தில் போக்குவரத்து நெரிசல் பெரு மளவு குறையும். இந்த பிரச்சினையை அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்று போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். ஆனாலும், ஒன்றிய பாஜக அரசும், ரயில்வே நிர்வாகமும் செவிசாய்க்க மறுக்கிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த எங்களது கட்சியின் சிங்காநல்லூர் நகர மாநாட்டில், சிங்காநல்லூர் ரயில்நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை மையப்படுத்தி போராட்டம் நடத்த தீர்மானம் இயற்றி உள்ளோம், என் றார். பொதுப்போக்குவரத்தை பலப்படுத்தி னால், சூழலியல் பாதுகாக்கப்படும் என்கிற விஞ்ஞான உண்மையை ஒன்றிய அரசும், ரயில்வே நிர்வாகமும் புரிந்து, அனைத்து ரயில்களும் சிங்காநல்லூர் ரயில்நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என் பதே அனைவரது எதிர்பார்ப்பு.