districts

img

நெசவுக் கூலி உயர்வு எதிர்பார்த்திருக்கும் பட்டுக் கைத்தறி நெசவாளர்கள்

திருப்பூர், பிப்.21- திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பட்டுச் சேலைகள் நெசவு செய்து தரும் கைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு வழங்குவதை எதிர்பார்த்து காத் திருக்கின்றனர். இதே நிலை நீடித் தால் போராட்டத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று கைத்தறி நெசவாளர்கள் கூறு கின்றனர். புளியம்பட்டி, சத்தியமங்க லம், தொட்டம்பாளையம், காங் கேயம், கணபதிபாளையம், திருப் பூர் பாண்டியன் நகர், நெசவாளர் காலனி, குண்டடம், தாராபுரம், பெல்லம்பட்டி, வதம்பச்சேரி, காமநாயக்கன்பாளையம் என கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு ஊர்க ளில் பட்டுச் சேலை கைத்தறி நெசவு தொழில் நடைபெற்று வரு கிறது. நெசவாளர்கள் தங்கள் வீடு களிலேயே கைத்தறிகளை வைத்து நெசவு செய்கின்றனர். பட்டு மற்றும் கோரா பட்டு என கச்சா நூல்களை வாங்கி வந்து  கூலிக்கு நெசவு செய்து தருகின்ற னர். குடும்பத் தொழிலாக இந்த நெசவுத் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த ஊர்களில் சரா சரியாக 50 முதல் 100 கைத்தறி கள் வரை உள்ளன. 

காங்கேயம் வட்டாரத்தில் காங் கேயம், சிவன்மலை, வீராணம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளை உ ள்ளடக்கி 700க்கும் மேற்பட்ட தறி கள் உள்ளன. ஆனால் கடந்த  இரண்டு ஆண்டு காலமாக இந்த  தொழிலில் நெசவாளர்களுக்கு நெசவுக் கூலி உயர்வு வழங்கப் படாமல் உள்ளது. இதனால் கைத் தறி நெசவாளர்கள் கடும் நெருக் கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள னர் என்று தெரிவிக்கின்றனர். பெங்களூரு, மைசூரு உள் ளிட்ட ஊர்களில் இருந்து பட்டு  நூல்களை வாங்கி வரும் வியாபா ரிகள் கைத்தறி நெசவாளர்க ளுக்கு பாவு நூல் கொடுத்து நெசவு  செய்து வாங்குகின்றனர். மற்ற பல கிராமப்புற கைத்தொழில்கள், சிறு, குறு தொழில்கள் ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் கார ணமாக நலிவைச் சந்திப்பதைப் போலவே, இந்த தொழிலும் நெருக் கடியைச் சந்திக்கிறது என்று இத் தொழில் துறையினர் கூறுகின்ற னர்.  குறிப்பாக பட்டுக்கு ஜிஎஸ்டி  வரி 5 சதவிகிதத்தில் இருந்து  12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள் ளது. அத்துடன் கச்சா பட்டு விலை யும் கடந்த சில மாதங்களாக அதி கரித்து வருகிறது. ஒரு கிலோ கச்சா பட்டு ரூ.3700 என்பதில் இருந்து ரூ.5800 என்ற அளவுக்கு கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் நூல் விலை  உயர்வைக் காரணம் காட்டி, நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் நடை பெற்ற சமயம் பட்டு வியாபாரிகள் நெசவாளர்களுக்கு உற்பத்தி செய்வதற்கு கச்சா பட்டு நூல் தரா மல் நிறுத்தினர். பிப்ரவரி 20ஆம் தேதி வரை இந்த போராட்டம் நடை பெறும் என்று தெரிவித்தனர். 

நூல் விலை உயர்வைக் கார ணமாக சொன்னாலும், உள்ளாட்சி  தேர்தல் சமயத்தில் பறக்கும் படை யினர் சோதனை செய்து பணத் தைக் கைப்பற்றும் நிலையில் பட்டு  வியாபாரிகள் அதைத் தவிர்க்க வும் இந்த உற்பத்தி நிறுத்தத்தை  அறிவித்ததாக நெசவாளர் தரப் பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நெசவாளர்கள் நெச வுக் கூலி உயர்வு கேட்டால் பட்டு  வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதா கவும், விற்பனை இல்லை என்றும்  சொல்லி நெசவுக் கூலி தர மறுப்ப தாக நெசவாளர்கள் வேதனையு டன் கூறினர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்காத நிலையில் நெசவாளர் குடும்பங்கள் சிரமப் படும் நிலை உள்ளது. கூலி உயர்வு கிடைக்காத  நிலையில், பற்றாக்குறையை சமா ளிக்க நெசவு செய்யும் நேரத்தை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர். பட்டுச் சேலை நெச வுக்கு குறைந்தபட்சம் ரூ.700 கூலி  கொடுப்பதாகவும், ரகம் மற்றும் அதன் வடிவமைப்புக்கு ஏற்ப ரூ.1500, ரூ.2000 என கூலி தருகின் றனர். முன்பெல்லாம் 6 மணி நேரம் வேலை செய்தால் இப்போது கூலி உயர்வு கிடைக்காத நிலையில் 10  மணி நேரம், 12 மணி நேரம் நெசவு செய்யும் நிலை ஏற்படுகிறது. உழைக்கும் நேரம் அதிகமானா லும் பற்றாக்குறை பாடு தீர வில்லை என்றனர். பட்டுச் சேலை வியாபாரம் நன் றாக இல்லை, மந்தமாக உள்ளது  என்று கூறி நெசவுக் கூலி உயர்வு  தர மறுக்கும் வியாபாரிகள், அதே சமயம் நெசவாளர்கள் எப்போது கேட்டாலும் உடனடியாக பாவு நூல் தருகின்றனர். வியாபாரம் மந்தம் என்றால் பட்டு சேலை உற்பத்தி குறைய வேண்டுமே, அப்படி குறையாமல் தொடர்ந்து விற்பனை ஆவதால் தானே அவர் களும் பட்டு சேலை உற்பத்திக்கு தொடர்ந்து நூல் தர முடிகிறது என்று தர்க்கரீதியாக கேள்வி எழுப்புகின்றனர் நெசவாளர்கள். எனவே பட்டு நெசவாளர்க ளுக்கு உரிய கூலி உயர்வை காலத்தே வழங்குவதற்கு பட்டு  வியாபாரிகள் முன்வர வேண்டும், இதே நிலை நீடித்தால் நெசவாளர் கள் போராட்டத்துக்குத் தள்ளப்ப டும் நிலை ஏற்படும் என்று தெரிவித் தனர்.