districts

img

கந்தசாமி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி கையெழுத்து இயக்கம்

திருப்பூர், அக்.24- கந்தசாமி அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தை, அனைத்து அடிப்படை  வசதிகளுடன் கூடிய மருத்துவமனை யாக தரம் உயர்த்தக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கையெ ழுத்து இயக்கம் நடத்தினர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண் கள் பயன்படுத்தும் கந்தசாமி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்  நடத்தினர். மேலும், கையெழுத்து பெற்ற படிவத்தை கோரிக்கை மனுவு டன் இணைத்து மாநகர நகர் நல அலுவ லரிடம் வியாழனன்று வழங்கினர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி, குமார் நகர் கந்த சாமி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டு, புதர்கள் மண்டி மிக  மோசமான நிலையில் உள்ளது. மேலும்  ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பயன் படுத்தும் மருத்துவமனையில் ஸ்கேன்  மற்றும் ஆய்வக வசதிகள் முறையாக இல்லை. கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சிகிச் சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய அரசு தலைமை மருத்து வமனைக்கும், தனியார் ஸ்கேன் சென் டர்களுக்கும் பரிந்துரைக்கப் படுகிறார் கள். பொதுமக்களின் நலன் கருதி கந்த சாமி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை அனைத்து அடிப்படை வசதிக ளும் கூடிய மருத்துவமனையாக தரம்  உயர்த்த வேண்டும். மாநகர பகுதிகளில்  கட்டப்பட்டு முழுமையாக பணிகள் முடி வடைந்த நிலையிலும், திறக்கப்படா மல் உள்ள சுகாதார நல்வாழ்வு மையங் களை உடனடியாக திறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில், மாநகரத் தலைவர் கண்ணன், மாநகர துணைச் செயலாளர்  அப்துல், மாநகரக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சந்துரு, பிரவீன் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.