தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என மதிமுக சார்பில் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மதிமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.கணேசன், துணைச்செயலாளர் கே.சிவகுமாரன், நகர செயலாளர் கே.ஜே.ரமேஷ், பள்ளிபாளையம் நகர்மன்ற துணைத்தலைவர் பி.பாலமுருகன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.