உடுமலை, ஜூன் 28- ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை தாலூகா குடிமங்கலம் ஒன்றி யம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எஸ்.வல்லக்குண்டாபுரம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இம்மக்களுக்கு சாலை வசதி மற்றும் குடிநீர் இது வரை இல்லாததால் பெரும் அவ தியடைந்து வருகின்றனர். கடந்த வருடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தியது. இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ஆக்கி ரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையை கண்டித்து கிராம நிர் வாக அலுவாகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத்தின் ஆக்கி ரப்புகளை அகற்றக்கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஊராட்சி தீர்மானத்தின்படி நில அளவீடு செய்ய வங்கியின் ரூ.7,400 பணம் செலுத்தபட்டது. மேலும், பணம் செலுத்தி பல மாதங்கள் ஆன நிலையில் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி உடுமலை கோட் டாச்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு நினை வூட்டல் கடிதம் தரப்பட்டது. இதன்பின்ன ரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனையடுத்து உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், உடுமலை கோட்டச்சியர் என தொடர்ந்து மனு அளிக் கப்பட்டது. ஆனாலும், எவ்வித முன்னேற்றமும் ஏற் படாததைத்தொடர்ந்து தமிழ்நாடு விவ சாய சங்கத்தினர் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். விவசாய சங்கத்தின் குடி மங்கலம் ஒன்றியக்குழு உறுப்பினர் கொண் டம்பட்டி கனகராஜ் தலைமையில் கொண் டம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் விவசாய சங்க குடிமங்கலம் ஒன்றிய தலை வர் சுந்தர்ராஜ், ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் மற் றும் சிகாமணி, கனகராஜ், நாச்சிமுத்து, நட ராஜ், மணிவேல் மற்றும் செல்லத்துரை உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.