உடுமலை, பிப். 20 - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை பாடமாக கற்றுத்தர வேண்டும் என் றும், தமிழ்நாட்டுக்கு கல்விக் கான நிதியை வழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் உடுமலை முற் போக்காளர்கள் கூட்டமைப் பினர் கேந்திரிய வித்யாலயா பள்ளியை முற்றுகையிட்ட னர். திருப்பூர் மாவட்டம் உடு மலைப்பேட்டை ராஜேந்திரா ரோட்டில் உள்ள தமிழக அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில், ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனை கண்டித்து, தமிழக அரசால் நடத்தப்படும் அரசு மேனி லைப்பள்ளியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் முற்போக்கு கூட்டமைப்பு சார்பில், கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தமி ழரசனிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் சாதிக் பாட்ஷா, தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ் சிக்கும் மோடி அரசு தற்பொழுது கல்விக்கு தர வேண்டிய நிதியை ஒதுக்காமல் இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி தர முடியும் என்று அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், உடு மலையில் கடந்த ஜந்நாண்டுகளாக ஒன்றிய அரசின் பள்ளி தமிழக அரசு பள்ளி வளா கத்தில் செயல்பட்டு வருவதை மாற்ற வேண்டும். அந்த பள்ளியில் தமிழ் மொழியை பாட மொழியாக மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதை திரும்ப பெற வேண்டும் என்றார். ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கையை கைவிடவில்லை என்றால் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு அலுவல கத்தின் முன்பாக தொடர் போராட்டங் களை உடுமலை முற்போக்காளர்கள் கூட்டமைப்பு நடத்தும் என்றார்.